கருப்புத் துணியை பிடுங்குகிறாயா!
நாங்கள்
கருப்புத் துண்டை பறக்கவிட்டு
எதிர்ப்போம்!
எங்கள் வீடுகளில் கோலமிட்டு
உன்னை துரத்தும்
முழக்கங்கள் எழுப்புவோம்!
உனது பலத்தால்
மன்றங்களை, தீர்ப்பாயத்தை
பணிய வைப்பாய்!
எங்கள் மனங்களில்
எரிகின்ற தீயை
உன்னால் அணைக்க முடியுமா?
உன்னை துரத்தும் வரை
ஓயமாட்டோம்!
சிறப்புசட்டம் இயற்று !
ஸ்டெர்லைட்டை விரட்டு !
படிக்க:
♦ அடக்கு முறையை எதிர்கொண்டு ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதே வீரம் !
♦ ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !
தொகுப்பு:
தூத்துக்குடியின் கோலத்தைப்பார் என்று மக்கள்
கதறினர், விடாப்பிடியாகப் போராடினர்;
அகர்வாலின் எச்சில் இலையில் புரண்ட பன்றிகளால்
14 பேர் தியாகிகள் ஆயினர்.
இன்றும் தூத்துக்குடி மக்களின் மனங்களைப் பார் என்று
தாம் எழுதிய கோலத்தில் காட்டுகின்றனர்.
வீரத்திற்கும் விடாமுயற்சிக்கும் சான்றோர் ஆகின்றனர்.
பூரிக்கிறேன், வாழ்த்துகிறேன்.