வணக்கம் !
“கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில்!” என்ற முழக்கத்தை முன்வைத்து, 2019 பிப் 23 சனிக்கிழமையன்று திருச்சியில் மாநாடு நடத்த உள்ளோம். அனைத்திந்திய அளவில் எழுத்தாளர்கள், அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். தாங்கள் நண்பர்கள், மற்றும் குடும்பத்தினரோடு மாநாட்டிற்கு வருகை தரவேண்டும் என உரிமையுடன் அழைக்கிறோம்.
ஏற்கெனவே, மக்கள் அதிகாரம் சார்பில் நடத்தப்பட்ட “மூடு டாஸ்மாக்கை” மற்றும் “விவசாயியை வாழவிடு” ஆகிய இரு மாநாடுகளுக்கும் நன்கொடையும் ஆலோசனைகளும் அளித்தது மட்டுமின்றி, பலர் நேரிலும் வருகை தந்து ஆதரவு அளித்துள்ளீர்கள். தொடர்ந்து எமது நடவடிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் ஆதரவளித்து வருகிறீர்கள். இந்த மாநாட்டிற்கும் உங்கள் பேராதரவை எதிர்நோக்குகிறோம்.
இன்றைக்கு அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விமரிசிப்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்ற கொடிய சட்டங்களின் கீழ் கைது செய்வதும், அமைதி வழியில் போராடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் தமிழகத்தில் சகஜமாகி வருகிறது. ஸ்டெர்லைட், மின்கோபுரம் அமைத்தல், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா ஆகிய கார்ப்பரேட் நலத்திட்டங்களை யார் எதிர்த்தாலும் அவர்கள் மீது தேசத்துரோகி இந்து விரோதி என பாஜக வினர் முத்திரை குத்துகின்றனர். உடனே, போலீசு அவர்கள் மீது பாய்கிறது. துண்டறிக்கை, ஓவியம், பாடல், வாட்ஸ் அப் என எந்த வடிவத்தில் பார்ப்பன பாசிஸ்டுகளை விமரிசித்தாலும், அவர்கள் போலீசின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.
அரசமைப்பு சட்டத்தை திருத்தாமலேயே இந்து ராஷ்டிரத்தை நிறுவுகின்ற திசையில் வெகு வேகமாக சென்று கொண்டிருக்கிறது மோடி அரசு. எல்லா துறைகளிலும் மாநிலத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., சி.ஏ.ஜி., சி.வி.சி. முதல் இராணுவம், போலீசு, நீதித்துறை வரையிலான அனைத்து நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ். ஆல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. அரசு எந்திரமே பாசிசத் தன்மை கொண்டதாக மாற்றப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் பசுக்குண்டர்கள் முதல் சனாதன் சன்ஸ்தா வரையிலான பலவகையான பாசிசக் கொலைப்படைகள் பெருகியிருக்கின்றன. முஸ்லீம்களுக்கும் தலித் மக்களுக்கும் எதிரான கொலைவெறித் தாக்குதல்கள் சகஜமானவையாக மாறி வருகின்றன.
2019 தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் அரசமைப்பிலும் சமூக சூழலிலும் காவி பாசிசம் ஏற்படுத்தியிருக்கும் மேற்சொன்ன அபாயகரமான மாற்றங்கள் அகன்றுவிடப் போவதில்லை. ஏனென்றால், பன்னாட்டு நிறுவனங்களும் கார்ப்பரேட்டுகளும் காவி பாசிசத்திற்கு பக்கபலமாக இருக்கின்றன. இந்தப் புரிதலை மக்களுக்கு ஏற்படுத்துவதற்கான ஒரு தொடக்கமாகவே இம்மாநாட்டை நடத்துகிறோம்.
படிக்க:
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்
♦ மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !
எமது மாநாடுகளுக்கும் போராட்டங்களுக்குமான நிதியை உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதே எமது வழக்கமான நடைமுறை. ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் அவ்வாறு திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. நெடிய நீதிமன்ற போராட்டத்திற்குப் பிறகு இந்த மாநாட்டுக்கான அனுமதியைப் பெற்றிருக்கிறோம். குறுகிய கால அவகாசத்தில் இம்மாநாட்டை நடத்தவேண்டியிருப்பதால், உங்கள் ஆதரவையும் நன்கொடையையும் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
மாநாட்டு நிதி அனுப்ப வேண்டிய முகவரி:
C. VETRIVEL CHEZHIYAN,
SB A/C NO:62432032779,
STATE BANK OF INDIA,
POZHICHALUR BRANCH,
CHENNAI.
IFSC: SBIN0021334
நன்றி !
தோழமையுடன்,
வழக்கறிஞர்.சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு: 99623 66321
I can give be money.. but I am a corporate employee. That would be a corporate money .. is it fine..?
நண்பா கார்ப்பரேட் உங்களது உழைப்புக்குத்தான் ஊதியம் தருகிறது அதுவும் உங்களது உழைப்பின் ஒரு பகுதிக்குத்தான் ஆனால் உங்களைப்போன்ற கோடான கோடி உழைப்பாளிகளின் ஒரு பகுதி ஊதியம்தான் கொடுக்கப்படாத கூலிதான் அவர்களின் (CORPORATES) லாபம் அதாவது உபரி மதிப்பு……
இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை வினவு youtube தளத்தில் முடிந்தால் நேரடியாக ஒளிபரப்பு செய்யுங்கள்