“பசி ஒரு வன்முறை” என்பார், உலக புகழ் பெற்ற முதலாளித்துவ பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென். ஒருபுறம் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களிடம் சொத்துக்கள் குவிந்திருக்க மறுபுறமோ ஏதுமற்றவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதை சென்ற ஆண்டின் இறுதியில் தாமஸ் பிக்கட்டி உள்ளிட்ட அறிஞர்கள் வெளியிட்ட ஐநா உலக வறுமை அறிக்கை அறுதியிட்டு கூறுகிறது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் மரணிப்பதற்கு வசிப்பிட அளவு, தாய்க்கு கிடைக்கும் கல்வியறிவு, குழந்தைகள் திருமணம், மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தான உணவு, சொத்துக்கள் அளவு, திறந்த வெளி கழிப்பிடம் உள்ளிட்ட சமூக ரீதியான பிரச்சினைகளை உலகளாவிய உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் தன்னுடைய 2018-ம் ஆண்டின் அறிக்கையில் கூறுகிறது.

படிக்க:
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !
♦ ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டில் (எண்ணிக்கை அடிப்படையில்) உலகளவில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் இந்தியா முழுதும் இது ஒன்று போலிருப்பதில்லை. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் முன்னணியில் இருக்கின்றன.

குறிப்பாக முட்டையுடன் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதன் வாயிலாக தமிழகம் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் இந்தியாவிற்கே முன்னோடியாக உள்ளது. மறுபுறம் இந்திய மாநிலங்களில் எங்கெல்லாம் பார்ப்பனிய ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அமர்த்தியா சென் கூறியவாறு பசி ஒரு வன்முறையாகவே உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம், பண்டல்கண்ட் பகுதியில் உடல் நலம் குன்றிய தன்னுடைய பேரனை பார்த்துக் கொள்கிறார் ஒரு மூதாட்டி. சமீபத்தில் வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி இந்தியாவில் 2.55 கோடி குழந்தைகள் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டல்கண்ட், லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் தன்னுடைய குழந்தையை வீட்டிற்கு வெளியே தூக்கி செல்கிறார். லலித்பூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளுமே ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தில் ஒரு சமூக நல மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஒரு குழந்தை. உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி உலக அளவில் மூன்றில் ஒருபங்கு குறை வளர்ச்சியுள்ள குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவதியுறும் இராஜஸ்தான் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தின் மற்றுமொரு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை.

உத்திரப்பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இராஜஸ்தான், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பாரன் மாவட்டத்தின் கேல்வாடா கிராமத்தை சேர்ந்த சகாரியா பழங்குடி குழந்தை. 2018-ம் ஆண்டு வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின்படி 4.66 கோடி எடை குறைவான குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.

இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக நல மருத்துவ கூடத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை.


தமிழாக்கம்: சுகுமார்
நன்றி:  அவுட்லுக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க