இந்த தேசியவெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது …

♣ ரஃபேல் விமான பேர ஊழல்.
♣ செல்லாத நோட்டில் செத்து மடிந்த உயிர்கள்.
♣ பண மதிப்பு நீக்கத்தால் நொடித்துப்போன தொழில்கள், இழந்த வேலைவாய்ப்புகள்.
♣ ஜி.எஸ்.டி. எனும் வரிவிதிப்பால் நிர்மூலமாகிப்போன தொழில்துறை.
♣ வேலைவாய்ப்பு வீழ்ச்சியில்1970-களின் நிலைமைக்கு சென்றுவிட்ட இந்தியா.
♣ நீட் தேர்வு என்ற பெயரில் நொறுக்கப்பட்ட ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு.
♣ அனிதாவின் உயிர்.
♣ ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், சி.பி.ஐ., தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் காவி மயப்படுத்தியது.
♣ அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை அமித்ஷாவின் ஏவல்படையாக மாற்றியது.
♣ உச்சநீதிமன்ற நீதிபதிகளே பிரஸ் மீட் வைத்து கதறும் அளவுக்கு நீதித்துறையை சீரழித்தது.
♣ மாநிலக் கட்சிகளை மிரட்டி அடிபணிய செய்து, கடைசியில் கட்சியையே கபளிகரம் செய்து, அடுத்தவன் கட்சி ஆபீஸில் வெட்கமின்றி தன் கட்சி தலைவர் படத்தை வைத்துக்கொள்வது.
♣ எட்டு வயது பெண் குழந்தையை கோயிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்த கொடூரர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் போன பா.ஜ.க.வின் கேவலம்.
♣ மாட்டுக்கறி சாப்பிடுவதை கொலைக்குற்றம் போல சித்தரித்த மக்கள் விரோத நடவடிக்கை.
♣ அக்லக் உள்ளிட்ட மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சொல்லி நிகழ்த்தப்பட்ட இந்து வெறி கும்பல்களின் கொலைகள்.
♣ கவுரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் என எழுத்தின் வழியே சமூக மாற்றத்துக்காக உழைத்தவர்களை இந்துத்துவ கும்பல் சுட்டுக் கொன்றது.
♣ நீதிபதி லோயா சுட்டுக் கொல்லப்பட்டது.
♣ உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, அருண் பெரைரா, கன்சால்வேஸ், வரவரராவ் ஆகிய இந்தியாவின் முக்கியமான மாற்றுக் குரல்களை அப்பட்டமான போலி வழக்குகளில் urban naxal என்ற பெயரில் கைது செய்தது.
♣ ஆனந்த் டெல்டும்டே மீதான தொடரும் நெருக்குதல்கள்.
♣ பள்ளிக் கல்வித்துறை தொடங்கி உயர் கல்வித்துறை வரையிலும் அனைத்தும் காவிமயப்படுத்தப்பட்டுள்ளது.
♣ மினிமம் பேலன்ஸ் இல்லை என்று ஏழைகளின் வங்கிக்கணக்குகளில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பல நூறு கோடி ரூபாய்.
♣ மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய குஜராத் பனியா கும்பலுக்கு கொடுக்கப்பட்டு, வாராக்கடனாகிப்போன சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய்.
♣ 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு எனும் அநியாயம்.
♣ மக்களின் எதிர்ப்பையும் கடந்து மீண்டும், மீண்டும் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு வழங்கப்படும் புதிய உரிமங்கள்.
♣ காவிரி மேலாண்மை வாரியத்தில் தமிழ்நாட்டை கழுத்தறுத்தது.
♣ தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக்கட்டியது.
♣ உயர்சாதி ஏழைகள் எனும் அரிய வகை ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது.
♣ இந்தியா முழுக்க பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஓர் இணை அரசாங்கத்தை நடத்த முயல்வது.
♣ அருவருப்பான, ஆபாசமான போலி செய்திகளையும் தப்பு தப்பான வரலாறுகளையும் எந்த கூச்சமும் இல்லாமல் தினம்தோறும் பேசுவது.
♣ சபரிமலை உள்பட பெண்களின் வழிபாட்டு உரிமையை, சுப்ரீம் கோர்ட்டே சொன்னாலும் கூட மதிக்காத திமிர்த்தனம்.
♣ 3000 கோடியில் படேல் சிலை, 15 லட்சத்தில் கோட் அணியும் ஏழைத்தாயின் மகன்

– இவை அனைத்தையும் போர்வெறியின் பின்னால் மறைத்துவிடலாம் என பா.ஜ.க நினைக்கிறது. நாம் மீண்டும் மீண்டும் இவற்றைப் பேசுவோம்.

நன்றி: முகநூலில், பாரதி தம்பி