நீ கோவிலில் நுழைந்தால் உன் காலை வெட்டுவேன் (1932) – இது இறைவன் ஆணை

ண்பர்களே…

பொ. வேல்சாமி
ஒரு தமிழன் இன்னொரு தமிழனை கோவிலில் நுழைந்தால் காலை வெட்டுவேன் என்று சொல்லுவது தமிழ்க் கலாச்சாரமாகவும் இந்திய கலாச்சாரமாகவும் பார்க்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. கோவில் நுழைவை ஆதரித்த காந்தியை அவமரியாதையாகப் பேசவும் செய்தனர்.

இதே நேரத்தில் கோவிலில் நுழைவதற்கு தமிழர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தும் வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு ஈ.வெ.ரா பெரியாரின் தோழர் பி.சிதம்பரம்பிள்ளை பி.ஏ.பி.எல் எழுதிய (1935) சட்ட விவரங்கள் அடங்கிய நூலும் வெளிவந்தது. இந்த நூலை அம்பேத்காரும் பிற அறிஞர்களும் வரவேற்ற செய்திகளும் பதிவாகி உள்ளன. இந்த இரண்டு நூல்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம். பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த இரண்டு நூல்களுக்கான இணையதளத் தொடர்ப்பை கொடுத்துள்ளேன்.

*****

திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் – 1

ண்பர்களே…

ஆங்கில ஆட்சியாளர்களுக்கும் ஐரோப்பிய பாதிரிமார்களுக்கும் தமிழ் மக்களின் மேல் நல்ல மரியாதையை உண்டாக்குவதற்கு காரணமான நூல் திருக்குறள். இத்தகைய சிறந்த நூலை ஐரோப்பிய பாதிரிமார்கள் தங்களுடைய தாய்மொழியில் மொழிபெயர்க்க ஆர்வம் கொண்டு அதனை செய்தனர். அத்தகையவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எல்லீஸ், துறு பாதிரியார், சார்லஸ் கிரால், ஜி.யூ.போப் போன்றவர்கள்.

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களான தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், துரை அரங்கனார், மு.வரதராசன் போன்றவர்களை உருவாக்கிய மதிக்கத்தக்க பேராசிரியர் “மளிகைக் கடை கோ.வடிவேலு செட்டியார்” (வடிவேலு செட்டியார் தன்னுடைய 32 வயது வரை மளிகைக் கடை நடத்திவிட்டு தன் கடைக்கு வந்த தமிழ்ப் புலவர்களுடான உறவால் தமிழ் கற்க ஆர்வம் கொண்டு தமிழ் கற்று மகாவித்துவானாகப் பலரால் போற்றி மதிக்கப்பட்டவர்.)

இத்தகைய பெருமை வாய்ந்த பேராசிரியர் வடிவேலு செட்டியார் திருக்குறளை பரிமேலழகர் உரையுடன் 1904-ல் வெளியிட்டார். திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரையை விளக்கியும், அதில் உள்ள நுட்பமான பகுதிகளுக்கு தன்னுடைய விளக்கவுரையை எழுதியும் முதல்முதலாக ஒரு விளக்கவுரை பதிப்பை வெளியிட்டார்.

படிக்க:
♦ உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ ஊஃபா – என்.எஸ்.ஏ தேச துரோக சட்டங்களை நீக்கு ! வலுக்கும் எதிர்ப்புகள் !!

இந்த நூல் பலராலும் மதிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதால் மீண்டும் 1919-ல் அதனை மறுபதிப்பாகக் கொண்டு வந்தார். அப்படி கொண்டு வரும்போது அந்த மறுபதிப்பில் தன்னுடைய நண்பர் ஒருவர் திருக்குறள் 1330 பாடல்களுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து கொடுத்ததாகவும் அந்த நண்பர் தன்னுடைய பெயரை மொழிபெயர்ப்பாளர் என்று குறிப்பிட வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டதாகவும் வடிவேலு செட்டியார் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் அந்த மொழிபெயர்ப்பு 1840-லும் 1852-லும் துறு பாதிரியார் செய்ததை கிட்டத்தட்ட முழுமையாகக் காப்பியடித்தாக உள்ளது. துறு பாதிரியார் மொழிபெயர்ப்பு செய்தது 630 பாடல்கள் மட்டுமே. மீதி உள்ள பாடல்கள் வேறு ஒரு பாதிரிமாரிடம் இருந்து அபேஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் துணைவேந்தராக இருந்தபோது தன்னுடைய ஆசிரியரான வடிவேலு செட்டியாரின் பதிப்பான திருக்குறளை மறுபதிப்பு செய்தார். 3 பாகங்களாக அந்நூல் வெளிவந்துள்ளது. இந்த மொழிபெயர்ப்பு துறு பாதிரியாருடையது என்பது, சிறந்த அறிஞரான தெ.பொ.மீ. கண்ணிலும் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: தயவுசெய்து கொடுக்கப்பட்டுள்ள படங்களை கவனமாகப் பார்க்கவும்.

நன்றி: முகநூலில்  பொ. வேல்சாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க