பிரதமர் மோதியின் ட்விட்டர் அக்கவுண்டிலிருந்து #mainbhichowkidar (நானும் காவலன்) ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதாவது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து, ஏழ்மையிலிருந்து, அழுக்கிலிருந்து, ஊழலில் இருந்து காப்பாற்ற மேலே சொன்ன ஹாஷ்டாகுடன் நாம் டிவிட்டரில் பதிவுசெய்ய வேண்டுமாம்.

இந்த ஹாஷ்டாகுடன் பலரும் (பெரும்பாலும் ஐ.டி. விங் ஆட்கள்தான்) பிரதமரின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டை tag செய்து காலை முதல் டிவிட்டரில் பதிவிட்டு வந்தனர். பிற்பகலுக்கு மேல் யாருக்கு அந்த யோசனை தோன்றியதெனத் தெரியவில்லை.

யாரெல்லாம் அந்த ஹாஷ்டாகுடன், பிரதமரை Tag செய்கிறார்களோ அவர்களுக்கு தானியங்கி முறையில், “your participation makes the #mainbhiChowkidar movement stronger” என பதில் அனுப்ப முடிவுசெய்தனர்.
ஆனால், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவர்கள் கற்பனைகூட செய்திருக்கவில்லை.

உடனடியாக நாட்டைவிட்டு ஓடிப்போன நீரவ் மோடியின் கற்பனை அக்கவுண்டிலிருந்து (கேலிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட அக்கவுண்ட்) மோடியின் அக்கவுண்டை tag செய்து #mainbhichowkidar என்ற ஹாஷ்டாகுடன் எதையோ எழுதிவைக்க, அதற்கும் மேலேபடி பிரதமரின் அக்கவுண்டிலிருந்து பதில் வந்தது.

இது மட்டுமல்ல, மோடியையும் பாஜக-வையும் கடுமையாக விமர்சிக்கும் பலரும் இந்த ஹாஷ்டாகுடன் பிரதமரை டாக் செய்து கன்னாபின்னாவென திட்டிவைக்க, அவர்களுக்கும் அன்புடன் பதில் வந்தது.

அவ்வளவுதான், ட்விட்டர் உலகில் ஓட்டித் தீர்த்துவிட்டார்கள். காவலனாக இருக்கச் சொல்லி நீரவ் மோடியை பிரதமரின் ட்விட்டரிலிருந்து கேட்டிருக்கிறார்களா என ஒமர் அப்துல்லாவும் சீரியஸாக கேள்வியெழுப்ப, என்ன செய்வதென தெரியாமல், அம்மாதிரி ட்வீட்களையெல்லாம் டெலீட் செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி, தனது ட்விட்டர் பதிவில் “மோதி தனது நண்பர்களுக்கு நன்றி சொல்கிறார்” என்று இதைக் கடுமையாகக் கேலிசெய்திருக்கிறது. உடனே பாஜக அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், என் பள்ளி நண்பர்கள் என்னைத் திட்டுவதுபோல திட்டிவைத்திருக்கிறார்கள்..

படிக்க:
மீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை
சுயமோகி மோடி – கேலிச்சித்திரங்கள் !

நாடு இருக்கும் நிலைமையில், இந்த வேலை நமக்குத் தேவையா?

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன் முகநூல் பதிவிலிருந்து…


அவசியம் இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll