சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணத்தை, ஏப்ரல் முதல் வாரத்தில் உயர்த்தி உத்தரவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம். இதனை எதிர்த்து கடந்த ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்தை கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தது நிர்வாகம். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக துணை வேந்தர் கட்டணத்தைக் குறைப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அவர் குறிப்பிட்டவாறு கட்டணத்தைக் குறைக்கவில்லை. கடந்த 3 நாட்களாக நிர்வாகத்தால் அலைக்கழிக்கப்பட்ட மாணவர்கள், நிர்வாகத்தைக் கண்டித்து நேற்று பல்கலைக்கழகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (08-04-2019) தொடங்கிய இப்போராட்டம், நேற்று இரவும் தொடர்ந்தது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

உயர்த்தப்பட்ட கட்டணத்தை எதிர்த்து இரவிலும் தங்களது போரட்டத்தைத் தொடர்ந்து  வருகின்றனர். விடுதி கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமல்லாது, மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட விடுதி வைப்பு தொகை ரூ.5000-ஐ திரும்ப வழங்க வேண்டும், SC-ST மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளையும் சேர்த்து வைத்து போராடி வருகின்றனர்.


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க