ண்ணாமலை பல்கலைக்கழக விடுதிக் கட்டணத்தை திடீரென உயர்த்தியது நிர்வாகம். இதனைத் தொடர்ந்து மாணவர்கள், கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மானவர்களின் கோரிக்கையை தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தியது நிர்வாகம்.

இதனைத் தொடர்ந்து, தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காத நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர் மாணவர்கள். இரவு பகல் பாராது போராட்டம் தொடர்ந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து சில பேராசிரியர்கள் பிஸ்கட், தண்ணீர் கேன் என வாங்கித் தந்து போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்தனர்.

முதலில் போராட்டத்தை அலட்சியப்படுத்திய நிர்வாகம் போராட்டத்தின் உறுதித் தன்மையை அறிந்து, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. அதற்கான உத்தரவை விடுதி அறிவிப்பு பலகையில் ஒட்டி விடுகிறோம் என்று துணைவேந்தர் முருகேசன் உறுதியளித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு சார்பாக இந்த போராட்டத்தின் வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்டது. மேலும் “நமது இன்றைய கோரிக்கை நிறைவேறி உள்ளது. ஆனால் நமக்குள் கனன்று கொண்டிருக்கும் போராட்டத் தீ என்றும் நிலைத்திருக்க வேண்டும். அது மக்களின் பொது பிரச்சினை என வரும் போது பற்றிப் பரவவேண்டும்” என்று மாணவர்களிடம் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த வகையில் இப்போராட்டத்தின் இறுதியில் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து, மாணவர்களின் சார்பாக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க