ஆன்லைனில் புத்தக விளம்பரம் இன்று, அச்சுக்கலை நுழைந்த நாளில் அன்று (19-ம் நூற்றாண்டு) புத்தக விளம்பரம் | பொ. வேல்சாமி

ண்பர்களே…

பொ.வேல்சாமி
இன்றைய காலகட்டத்தில் புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பதற்கான விற்பனை வழிமுறைகள் எத்தனையோ வகையான நவீன முறைகளாக வளர்ந்து விட்டதை நாம் அனைவரும் அறிவோம். ஏட்டுச்சுவடிகளாக இருந்த நூல்கள் புத்தகங்களாக அச்சு வாகனம் ஏறிய அந்தக் காலத்தில் (19-ம் நூற்றாண்டு) எப்படி இருந்தது என்பதைக் காட்டும் அன்றைய “விளம்பரங்களை” பாருங்கள் நண்பர்களே….

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குறிப்பு : 1873-லும் 1880-லும் உரையுடன் அச்சிடப்பட்ட யாப்பருங்கலக் காரிகை நூலின் பெறுவதற்கான விளம்பரங்கள் அந்த நூல்களின் முதல் பக்கத்திலும் கடைசிப் பக்கத்திலும் இடம்பெற்றிருந்தன. அதிலுள்ள விளம்பர வரிகள் சுவை பயப்பனவாகவும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

*****

“கால்டுவெல்” லண்டனிலிருந்து அனுப்பிய அவருடைய புகைப்படம்.

ண்பர்களே….

கால்டுவெல் அவர்கள் தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னுடைய சென்னை நண்பர் ஜோசப் சத்திய நாடார் M.A.,M.L., அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படத்தை 1906 -இல் தான் வெளியிட்ட “தமிழ்” என்ற நூலில் தமிழறிஞர் செல்வகேசவ முதலியார் வெளியிட்டுள்ளார். இந்நூலில் கம்பருடைய உருவச் சிலையும் சிவஞான முனிவருடைய உருவச் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக செல்வகேச முதலியார் குறிப்பிடுகின்றார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க