மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக் கழகம் !

ண்ணா பல்கலைக் கழகம் இந்த ஆண்டு முதல் கல்விக் கட்டணத்தை சுமார் 130% அதிகரித்திருக்கிறது. இது கிராமப்புறங்களிலிருந்தும், ஏழைக் குடும்பங்களிலிருந்தும் கல்வி பயில வரும் மாணவர்களை உயர்கல்வியை விட்டே விரட்டும் சதிச்செயலாகும். அண்ணா பல்கலையின் சதிச் செயலை அம்பலப்படுத்துகிறார், புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

 

மோடி கூட்டணியுடன் தமிழை அழிக்கத் திட்டமிடும் தமிழக பள்ளிக் கல்வித்துறை !

மிழக பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் ஒரு பரிந்துரையை வெளியிட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளியில் மொழிப் பாடத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எதாவது ஒரு மொழியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று மாற்றம் கொண்டுவரப் பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே மக்கள் மத்தியில் ஆங்கில மாயையைப் பரப்பிவிட்டு தமிழ் வழிக் கல்வியை ஒழித்துக் கட்டியிருக்கிறது அரசு.

இந்நிலையில் மொழிப்பாடத்தில் தொற்றிக் கொண்டிருக்கும் தமிழையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டும் இந்தச் சதியை அமல்படுத்தத் துடிக்கிறது காவிகளின் அடிமை எடுபிடி அதிமுக அரசு. இதனை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடங்குவோம் என்று அறைகூவல் விடுக்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் !

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க