விவசாயிகளுக்காகப் போராடிய தோழர் ரவிக்கு சீர்காழி புதுப்பட்டினம் போலீசு கொடுப்பதோ ரவுடிப்பட்டம்!

மக்கள் அதிகாரம் கண்டனம்!

25.07.2018

நாகை மாவட்டம், சீர்காழி வட்டார மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி அவர்களை சீர்காழி – புதுப்பட்டினம் போலீசு ரவுடிப் பட்டியலில் சேர்த்து இருக்கிறது. கடந்த 30 வருடங்களாக சீர்காழி விவசாயிகளுக்கு பிரச்சினை என்றால் எப்போதும் முன்னே நிற்கக்கூடிய தோழர் ரவியின் மீது 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் நாகை மாவட்ட போலீசு நிலையங்களில் மட்டுமே இருக்கின்றன.

தேர்தலுக்கு முந்தைய சில நாட்களுக்கு முன்னர் கூட விளைநிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய்கள் போடும் நாசகார வேலையை மக்களோடு சேர்ந்து தடுத்து நிறுத்தினார். காவிரி டெல்டாவின் முக்கியமான பகுதியான சீர்காழியை குறிவைத்து ஓ.என்.ஜி.சி வாய் பிளந்து நிற்கிறது. மக்களோ எதிர்த்து நிற்கிறார்கள். இந்த நிலையில் மக்கள் போராட்டத்தை நசுக்க போராளிகள் மீது பொய்வழக்குப் போட்டு அச்சுறுத்தி காவலில் வைக்க முயல்கிறது தமிழக அரசு.

படிக்க:
மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி
♦ தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

கடந்த ஜூலை 17-ம் தேதி போராடுவோர் மீது பொய் வழக்குகளைப் போடும் போலீசைக் கண்டித்து சட்டமன்ற முற்றுகையை மக்கள் அதிகாரம் நடத்தியது. அதை சரியென்று நிரூபிக்கிறது சீர்காழி போலீசு! மாபியாக்களின் ஆட்சியில் போராளிகளுக்கு புனிதர் பட்டமா கொடுப்பார்கள்? பொய்வழக்குகளுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை!

எதிர்த்து நிற்போம்!

  • விவசாயிகளுக்காகப் போராடினால் சீர்காழி புதுப்பட்டினம் போலீசு கொடுப்பதோ ரவுடிப்பட்டம்!
  • அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் தொடர்ந்து விவசாயிகளுக்காகப் போராடுவோம்!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321