மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம்

கடந்த ஜூலை-25, வியாழக்கிழமை அன்று மாலை மதுரை சோக்கோ அறக்கட்டளை அரங்கில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தின் பதிவுகள்.

0

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! என்கின்ற தலைப்பில் கடந்த ஜூலை-25, வியாழக்கிழமை அன்று மாலை மதுரை சோக்கோ அறக்கட்டளை அரங்கில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் ஸ்னேகா தலைமை தாங்கினார்.

சிறப்புப் பேச்சாளர்களாக மதுரை காமராஜர் பல்கலையின் மேனாள் பேராசிரியர் சீனிவாசன், பள்ளி ஆசிரியர்கள் சிவா, சரவணன் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்திற்கு திரளான மாணவர்கள் கலந்து கொண்டது ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் இந்த புதிய கல்விக் கொள்கையை முறியடித்துவிட முடியும் என்கின்ற நம்பிக்கையை தருவதாக இருந்தது. அதற்கு தகுந்தாற் போல் இந்த கல்வி கொள்கையை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்துவதாகவும், கருத்தியல் ஆயுதத்தை மாணவர்களுக்கு தருவதாகவும் சிறப்புப் பேச்சாளர்களின் உரைகள் இருந்தது.

முத்தாய்ப்பாக ஆசிரியர் சிவா பேசும்போது “இந்த வரைவு அறிக்கையின் கடைசி பத்தியில் ஒரு ரூபாய் முதல் போட்டால் பத்து ரூபாய் லாபம் கிடைக்கும் கல்வி துறையில் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது என்று கூறுவது ஒன்றே போதும் இந்த கல்விக் கொள்கை என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்படுகிறது” என்று பேசியது ஒட்டு மொத்தமாக இனி வரும் ஆண்டுகளில் நம்முடைய குழந்தைகளின் கல்வி உரிமை கானல் நீராக மறைந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை பளிச்சென்று புரியவைப்பதாக இருந்தது.

அதே போல் கருத்து கேட்பு கூட்டத்தை பகிரங்கமாக மக்களுக்கு தெரியப்படுத்தி நடத்தாமல் ரகசியமாக நடத்துவது, கோவையிலும், திருச்சியிலும் நடந்தது போல் தோழர்கள் கண்டுபிடித்து வந்துவிட்டால் உடனே “இங்கே நடப்பது கருத்து கேட்பு கூட்டம் அல்ல, துறை ரீதியான கலந்தாலோசனைதான்” என்று சமாளிப்பதையும் இதே போல் கடந்த 22 ஆம் தேதி அன்று மதுரையில் ரகசியமாக நடக்க இருந்த கருத்து கேட்பு கூட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சுவரொட்டி மூலம் மக்களுக்கு பகிரங்கமாக தெரிவித்த பின்னர் உடனே அந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்துள்ளது என்பதையும் பேச்சாளர்கள் அம்பலப்படுத்தி பேசினர்.

கூடுதலாக 26-ம் தேதி அன்று மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் நடக்க இருந்த கருத்துக் கேட்பு கேட்பு கூட்டத்தையும் துறைரீதியான கூட்டம் என்பதாக அறிவித்துவிட்டு, மக்கள் யாரும் வர வேண்டாம் என அரசே பத்திரிக்கையில் செய்தி கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டி பேசினர்.

படிக்க:
செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை ! முசுலீமாய் பிறந்ததுதான் குற்றமா ?
‘சாஹேபுக்காக’ இளம் பெண்ணைக் கண்காணித்த அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு தலைவராம் !

இறுதியாக பு.மா.இ.மு. வின் தோழர் ஆனந்த் தனது நன்றியுரையில் இந்த அரங்க கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் மற்றும் மாணவர்கள் இந்த கருத்துக்களை தங்களுடைய நண்பர்கள் உற‌வினர்கள் என அனைவரிடமும் எடுத்து செல்ல வேண்டும்; அவர்களையும் இதை எதிர்த்து போராட தயார்படுத்த வேண்டும். அதுவே இந்த கூட்டத்தை நடத்தியதன் நோக்கம் என்று மாணவர்களை அறைகூவி அழைத்தார்.

தகவல் :
பு.மா.இ.மு,
மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க