தேசியப் புலனாய்வு முகமைக்குக் (NIA)கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனுடன் அமைப்பு சாராத தனிநபரையும் பயங்கரவாதியாக அறிவிக்க வகை செய்யும் திருத்தமும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) கொண்டுவரப்படுகிறது. அத்துடன் தேசிய மனித உரிமை கமிசனின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளைத்தான் நியமிக்க வேண்டும் என்பதை மாற்றி, எல்லா ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் நியமிப்பதற்கும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை மனித உரிமை கமிசனில் நுழைப்பதற்கும் ஏற்ற திருத்தங்களும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

என்.ஐ.ஏ. திருத்தத்தின்படி, இனி ஒரு மாநிலக் காவல்துறை ஆய்வாளருக்கு உள்ள அதிகாரத்தை என்.ஐ.ஏ.-வின் ஆய்வாளரும் பெறுகிறார். இதுவன்றி, இதுகாறும் மாநிலக் காவல்துறையின் அதிகார வரம்புக்குள் இருந்த ஆட்கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதங்கள் தயாரித்தல், வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66(f) ஆகியவை அனைத்தையும் இனி மாநிலக் காவல்துறையின் அனுமதியின்றி நேரடியாக என்.ஐ.ஏ. விசாரிக்கும். மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று விசாரிப்பதற்கான அதிகாரம், என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றங்களை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள்தான் நியமிக்க வேண்டும் என்பதை மாற்றி, குறிப்பிட்ட அமர்வு நீதிமன்றங்களைச் சிறப்பு நீதிமன்றங்களாக மைய அரசு நேரடியாக அறிவிப்பதற்கான அதிகாரம் ஆகியன உள்ளிட்ட கூடுதல் அதிகாரங்கள் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கின்றன.

பிரிவினைவாதத் தடைச் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட உபா (UAPA) சட்டத்திற்குள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள் சேர்க்கப்பட்டன. இப்போது தனிநபர்களையும் பயங்கரவாதிகள் என்று அறிவிப்பதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை மாநில அரசின் அனுமதியில்லாமல், என்.ஐ.ஏ. நேரடியாகவே முடக்குவதற்கான திருத்தமும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

படிக்க:
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
♦ உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே ரேசன் கார்டு ஆகியவற்றின் வரிசையில் ஒரே போலீசைக் கொண்டுவரும் என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் வலது, இடது கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் இசுலாமியக் கட்சிகளைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே. மற்ற 278 எம்.பிக்கள் – தி.மு.க. உள்ளிட்டு இதனை ஆதரித்தே வாக்களித்திருக்கின்றனர்.

இந்தத் திருத்தம் மாநில உரிமையைப் பறிக்கும், அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்தப்படும், முஸ்லீம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் அனைத்தையும் நிராகரித்த அமித் ஷா, பொடா சட்டம் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதில்லை என்றும், ஓட்டு வங்கி அரசியலுக்காகத்தான் காங்கிரசு அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றதாகவும், சம்ஜௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்பு வழக்கே ஆதாரமற்ற பொய்வழக்கு என்றும் குற்றஞ்சாட்டினார்.

அமித் ஷா பேசிய அனைத்தும் பொய். என்.ஐ.ஏ. மாநிலங்களின் உரிமையில் தலையிடுகிறது என்றும், எனவே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர், வேறு யாருமல்ல, பிரக்யா சிங் தாக்குர். இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த ப.சிதம்பரமே, இது நீதிமன்றத்தில் நிற்குமா என்று தெரியவில்லை எனக்கூறியதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது.

பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்குக் கணக்கிலடங்காத எடுத்துக்காட்டுகள் உள்ளன. சம்ஜௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில், 2014-இல் மோடி ஆட்சிக்கு வந்த பின், இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான மறுக்கமுடியாத மின்னணு (எலக்ட்ரானிக்) ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவே இல்லை. என்.ஐ.ஏ.-வின் யோக்கியதையைக் காறி உமிழ்ந்து விட்டுத்தான் அரசு வழக்கறிஞர் ரோகிணி சலியான் பதவி விலகினார். என்.ஐ.ஏ. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, ஹாதியாவின் திருமணம் மதமாற்ற சதியா என்று விசாரிப்பதற்கு என்.ஐ.ஏ. வை நியமித்தது உச்ச நீதிமன்றம்.

இன்னும் சொல்வதற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளன என்பது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், ஆதரித்து வாக்களிப்பது என்று முடிவு செய்தபின், எப்படி எதிர்த்துப் பேச முடியும்? இவர்கள்தான் மதச்சார்பின்மையையும் மக்களின் உரிமைகளையும் காப்பாற்றக் களம் புகுந்திருக்கும் மாவீரர்களாம்!

– தொரட்டி

– புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க