போலீசு நிலையம் முற்றுகை : அண்ணாமலை பல்கலை மாணவர்கள் அதிரடி !

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாகப் பீற்றிக்கொள்ளும் போலீசு, மாணவர்களையும் - மக்களையும் மதிப்பதில்லை என்பதை நிரூபிக்கிறது இந்த நிகழ்வு.

0

டலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். விடுமுறை காலங்களில் மாணவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டு பகல் – இரவு நேரங்களில் பல்கலைக்கழகத்திற்கு வருவது சகஜமானது. கடந்த 04.08.2019 (ஞாயிறு) அன்று மூன்று மாணவர்கள் – தங்களை பாதிக்கூடிய – மோடியின் புதிய கல்வி கொள்கையைக் கண்டித்து நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இரவு 12:30 மணி அளவில் பல்கலைகழகத்திற்கு வந்தனர்.

அங்கு ரோந்துப் பணியில் இருந்த காவலர் கௌதமன் மாணவர்களைப் பார்த்து உன் பேர் என்ன; என்ன படிக்கிற; உங்க அப்பா என்ன செய்றாங்க; எங்க போய்ட்டு வர; குடிச்சிருக்கியா..? என விசாரித்துள்ளார். போலீசின் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்த அம்மாணவர்களை, என்னடா திமிரா பேசுற என ஆபாச வார்த்தைகளால் மாணவர்களையும், குடும்பத்தினரையும் கடுமையான பேசினார்.

“சார், நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்னால் இப்படிதான் பேசிவீங்களா..!” என கேட்டதற்கு. “என்ன திமிருடா உனக்கு.. கேஸ் போட்டா வாழ்க்கையே போயிடும்.. உன் வார்டன் யார்ரா ? தே.. பய…” எனக் கடுமையாக பேசி விடுதி வாசலில் நின்று மீண்டும் மிரட்டினார். சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் யோக்கிய சிகாமணி கௌதமனின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனை கண்டிக்கும் விதமாக மறுநாள் மாணவர்கள் 40 -பேர் திரண்டு சென்று “மாணவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என போலீசு துணை கண்காணிப்பாளரிடம் (DSP) மனு அளித்தனர்.

மேலும் “இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து போலீசு ஈடுபட்டால், பல்கலைக்கழக மாணவர்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (மாவட்ட செயலாளர்) தோழர் மணியரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (மாவட்ட செயலாளர்) தோழர் பால. அறவாழி ஆகியோர் உடனிருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு: 97888 08110

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க