மோடியின் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து கடலூர் பெரியார் அரசு கலை கல்லூரி மாணவர்கள் இன்று (14-08-2019) காலையில் வகுப்புப் புறக்கணிப்பு ஈடுபட்டனர்.

பெரும்பான்மையான மக்களின் கல்வி உரிமையை பறிக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும்; 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது ஏழை மாணவர்களை வடிகட்டும் நோக்கத்தை கொண்டது என்பதையும்; மும்மொழி கொள்கை திணிக்கும் முயற்சியையும் அம்பலப்படுத்தும் விதமாக கண்டன முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர்.

படிக்க:
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்
காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து மாணவர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென்றும் அறைகூவல் விடுத்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 97888 08110.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க