“கார்ப்பரேட் கொள்ளைக்கான சட்டதிருத்தங்களை கிழித்தெறிவோம் !” என்ற தலைப்பில் கடந்த 18.08.2019 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், சென்னை திருவெற்றியூரில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

NDLF Meetingஇக்கூட்டத்துக்கு பு.ஜ.தொ.மு மாநில தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் பொருளாதார ஆய்வாளர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் “பொருளாதார நெருக்கடியும், தொழிலாளர் வர்க்கம் எதிர் கொள்ளும் சவால்களும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பொருளாதார சிக்கல்களை விளக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு தெளிவான பார்வையை கொடுக்கும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது. அதன் பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் தங்கள் கேள்விகளை முன்வைத்தனர். அவர்களுக்கு முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் பதிலளித்தார்.

அவரைத் தொடர்ந்து பொது கல்விக்கான ஒருங்கிணைப்பு குழுவின், சென்னை துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.ரமேஷ் அவர்கள் “புதிய கல்வி கொள்கை – 2019” குறித்து உரையாற்றினார். அவர்தம் உரையில் “இதனை புதிய கல்வி கொள்கை என குறிப்பிடக் கூடாது. தேசிய கல்விக் கொள்கை என்பதே சரி. அதுவும் பாஜக ஆட்சியில் உள்ள தருணத்தில் ‘தேசிய’ என்பதன் பொருள் இந்துத்துவத்துக்கும் – கார்ப்பரேட்களுக்குமானது” என்பது குறித்து விளக்கி பேசினார்.

இறுதியாக புஜதொமு SRF மணலி கிளை பொருளாளர் தோழர் P.R.சங்கர் நன்றியுரையாற்றினார்.

படிக்க:
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 முதல் பாகம் | டவுண்லோடு
♦ தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

இந்த கூட்டத்தில் CITU திருவெற்றியூர் பகுதி தோழர்கள், மணலி தொழிற்சங்க கூட்டமைப்பு (FMTU), CPCL தொழிலாளர் சங்கம், TPL தொழிலாளர் சங்கம், பால்மர் லாறி தொழிலாளர் சங்கம், KPL தொழிலாளர் நலச்சங்கம், CETEX தொழிலாளர் சங்கம், SRF & SRF(P) தொழிலாளர் சங்கம், இந்துஜா பவுண்டரி தொழிலாளர் சங்கம், அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கம், MRF தொழிலாளர் சங்கம், ராயல் என்பீல்டு தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு – மேற்கு) மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 94444 61480 / 94453 68009

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க