PP Letter headபத்திரிகை செய்தி

காவிரி நீர் கடைமடையில் பாயாமல் கொள்ளிடம் ஆறு மூலம் கடலில் கலப்பதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை.

டந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணை ஜூன்-12 ல் திறக்காததால் காவிரி டெல்டாவில் குறுவை பருவம் பொய்த்து போய்விட்டது. கனமழையால் கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணையில் 70 அடி இருக்கும் போதே தமிழக அரசு நீரை திறந்து விட்டிருந்தால் குறுவை சாகுபடி செய்தும், கடலில் வீணாவதை தடுத்தும் இருக்க முடியும்.

இந்த ஆண்டும் 35,000 கனஅடிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து வீணாக கடலில் கலந்து வருகிறது. காவிரியின் கிளை ஆறுகளில் பாசனத்திற்கு நீரை திறந்திருந்தால் காய்ந்து கிடக்கும் கடைமடை பகுதி வரை பாய்ந்து ஏரி, குளம் நிரம்பி விவசாயம் செழித்து இருக்கும். மக்களுக்கு வேலைவாய்ப்பும், குடிநீர்- நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். கடந்தாண்டு உடைந்த மேலணை இதுவரை கட்டப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போதே கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு என்ற கிராமம் அருகே கதவணை கட்ட 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் இதுவரை கட்டப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் சந்தப்படுகையில் சென்ற ஆண்டு தடுப்பணை கட்ட 110 கோடி ரூபாயில் அடிக்கல் நாட்டப்பட்ட அணையும் கட்டப்படவில்லை. இதனால் காவிரியின் உபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது.

காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், நிலக்கரி எடுக்கும் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் வளமான காவிரி டெல்டாவை அழிப்பதற்கு மத்திய அரசு மற்றும் வேதாந்தாவுடன், தமிழக அரசும் கூட்டு சேர்ந்து இந்த துரோகத்தை செய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நீர் திறப்பதற்கு முன்பே பழுது பார்ப்பது, தூர்வார்தல், பாலம் கட்டுவதை செய்யாமல் தண்ணீர் திறந்துவிட்ட பின்பு செய்வதால் குறைந்தபட்ச தண்ணீர் கூட கடைமடைக்கு வராமல் தடுக்கின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு துரோகம் செய்யும் எடப்பாடி அரசையும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

♦ கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்டு!
♦ காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி!
♦ கடைமடை வரை நீரை உடனே பாய விடு!
♦ விவசாயத்திற்கான அனைத்து ஈடு பொருட்களையும் போர்க்கால அடிப்படையில் உடனே வழங்கு!

மக்கள் அதிகாரம்

***

காவிரி நீர் கடைமடைப்பகுதி வரை சென்று சேராததற்கு காரணமாக அமைந்துள்ள அரசின் அலட்சியம் – பொதுப்பணித்துறையில் நடைபெற்றுவரும் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும், மிக முக்கியமாக டெல்டா பகுதியை கார்ப்பரேட் கொள்ளைக்கான வேட்டைக்காடாக மாற்ற முயலும் அரசின் சதியை அம்பலப்படுத்தும் வகையிலும் கடந்த செப்-17 அன்று சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காயும் கடைமடை விவசாயத்திற்கு தண்ணீர் விடாததை கண்டித்தும்!
திருவாலி – பெருந்தோட்டம் ஏரிகளை நிரப்பக்கோரியும்!
பாசன அமைப்புகளை சீர் செய்யாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும்- பொதுப்பணித்துறையை கண்டித்தும்!
கொள்ளிடத்தில் வீணாக வடியும் தண்ணீரை சேமித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடியாக தடுப்பணை கட்ட கோரியும்!
2018-2019 பயிர்காப்பிட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரியும்!

கடைமடை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். கட்சிகளைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்தன.

தோழர் அ.சீனிவாசன், நாகை மாவட்ட செயலாளர், சி.பி.ஐ.

”பொதுப்பணித்துறை என்பது பொறுப்பான துறை தான். தற்போது பொறுப்பாக தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் பங்கு பிரித்து  கொடுப்பது என்பதில் மிகவும் சிறப்பாக தான் செய்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக நகரத்தில் தான் தண்ணீர் பிரச்சனை அதிகமாக இருக்கின்றது என்று நினைத்திருந்தோம். ஆனால், கிராமங்களிலும் பல கிலோமீட்டர் தூரம் சென்று தான் நல்ல தண்ணீர் கொண்டு வரும் நிலை சீர்காழி வட்டாரங்களில் உள்ளது. இன்று ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்தினால் காவிரி டெல்டா பாலைவனமாகும் அபாயம் உள்ளது. இப்பெரும்பிரச்சனையை பற்றிப் பேசாமல் இந்தியா முழுவதும் இந்தியை திணிக்கின்ற வேலையில் இறங்கியிருக்கின்றது மத்திய அரசு. குளு குளு அறையில் உட்கார்ந்துக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு ஏழை, எளிய மக்களின் பிரச்சனைகள் எப்படித் தெரியும். தமிழக அரசு பல ஆண்டுகளாக மழை பெய்யும் போதே காவிரி தண்ணீரை திறந்து விடும். ஆனால், அது மழைநீரா? இல்லை காவிரி நீரா? எனத் தெரியாது. இந்தாண்டு நான் காவிரி நீரை ஏ- பிரிவு வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்காலில் மட்டும் பார்த்தேன். மற்ற வாய்க்காலில் எங்கும் பார்க்க முடியவில்லை. பார்த்த நீரை கூட எங்களால் அனுபவிக்க முடியவில்லை. சீர்காழி பகுதிக்குட்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்கள் அதிகாரம் அமைப்புடன் சேர்ந்து செய்வோம். எங்கள் மாநில செயலாளர் 10 கி.மீ.-க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என அரசுக்கு நல்ல ஆலோசனை கூறியிருக்கிறார். தற்போது இருக்கும் அரசாங்கம் இதைச் செய்யாது.”

தோழர் த. ரவி, வட்டார ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், சீர்காழி.

”பொதுப்பணித்துறையில் நிறைய அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களின் வேலை குடிக்கத் தண்ணீர் கொடுக்கனும், விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்கனும், வாய்க்காலை தூர்வாரனும், தடுப்பணை கட்டனும் இதுதான் அவர்களின் வேலை. ஆனால், தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கியும் ஏன் இவ்வளவு நாள் தடுப்பனை கட்டவில்லை என அரசிடம் கேட்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தகுதியில்லையா? அறிவில்லையா? வெட்டிய வாய்க்காலில் ஏன் தண்ணீர் வரவில்லை என அதிகாரி பார்க்கனுமா? பார்க்கக் கூடாதா? இப்படி எந்த வேலைகளையும் எதையும் செய்வது இல்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முக்கியமான நோக்கம் பங்கு போட்டுக் கொள்ளையடிப்பது தான். ஒரு வேலையை வருங்கால தேவைக்காக முன் கூட்டியே திட்டமிட்டு செய்வதற்கு தான் பொதுப்பணித்துறை. இன்று தண்ணீர் வந்த பிறகு அறைகுறையாக தூர்வாரி கணக்கைக் காட்டி கொள்ளையடித்து விடுகிறார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து பொதுப்பணித்துறை சட்டையை என்றைக்கு பிடித்து கேள்வி கேட்கிறோமோ அன்று தான் குடிக்கத் தண்ணீர் கிடைக்கும், விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கும், சாப்பிட உணவு கிடைக்கும்”

தோழர் வீரராஜ், ஒன்றிய செயலாளர். த.வி.ச.

”பொதுப்பணித்துறை தண்ணீர் திறந்து விட்டதாக கூறியிருக்கிறது. ஆனால், எந்த வயலிலும் தண்ணீர் இல்லை. ஏ- பிரிவு வாய்க்காலில் மட்டும் தான் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். மக்களிடம் பொய்க் கூறி மக்களை நம்ப வைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கூறுவதற்கு கூட போலிசே தடுக்கின்றது. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான இடத்தையே ஒதுக்கித் தரவில்லை. நாங்களே ஆர்ப்பாட்டத்திற்கு இடம் ஏற்பாடு செய்து கொண்டு நடத்தும் அவல நிலைதான் இன்று இருந்தது. இது போல நடைமுறையை மீண்டும் கடைபிடித்தால் போலிசைக் கண்டித்துத்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியிருக்கும்.”

படிக்க:
கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE

மேலும், தோழர் ப.வ. பெரியார் செல்வம், மாவட்ட செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்; தோழர் சி.வி.ஆர். ஜீவானந்தம் மாவட்ட செயற்குழு, சி.பி.ஐ.எம்; தோழர் கி. வரதராசன், ஒன்றிய வி.ச. செயலாளர், சி.பி.ஐ., மற்றும் தோழர் எஸ். மேகலா, மாவட்ட செயலாளர், அனைத்திந்திய மாதர் சங்கம், நாகை மாவட்டம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, தோழர் செல்லப்பன் நன்றியுறை கூறினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க