“தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !” என வாசகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று,  அறிவுடைநம்பி என்ற வாசகர், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளுக்கு 150 புதிய கலாச்சாரம் இதழ்களை அன்பளிப்பாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதன்படி, இதயத்தை மீட்பது எப்படி? மற்றும் போர்னோ : இருளில் சிக்கும் இளமை ஆகிய தலைப்பில் வெளிவந்த புதிய கலாச்சாரம் நூல்கள் தலா 50 அனுப்பி வைக்கப்பட்டன. மேற்கண்ட நூல்கள், தஞ்சை பகுதி ம.க.இ.க. தோழர்கள் உதவியுடன் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் விநியோகம் செய்யப்பட்டது. இதில் 20 பிரதிகள் கல்லூரி நூலகத்திற்கும் எஞ்சிய 80 பிரதிகள் மாணவிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. மீதமுள்ள 50 நூல்கள் வரும் மாதத்தில் விநியோகிக்கப்படும்.

நீங்களும் உங்கள் பங்களிப்பாக புதிய கலாச்சாரம் வெளியீடுகளை மாணவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரிகளைத் தெரிவு செய்தும் பணம் அனுப்பலாம். கீழே உள்ள இணைப்பில் முழு விவரங்கள் உள்ளன. ஆதரவு தாருங்கள் !

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A