மோடி அரசு டிசம்பர், 2019-ல் கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவுமே கிளர்ந்தெழுந்துள்ளது. இச் சட்டத்தை முசுலீம் மக்கள் மட்டுமே எதிர்ப்பார்கள், இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்த சங்க பரிவாரத்தின் கனவில் மண்ணள்ளிப் போட்டது இந்த மக்கள் எழுச்சி.
“தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டத்தாலும், தேசிய குடிமக்கள் பதி வேடு திட்டத்தாலும், சட்டவிரோதமாகக் குடியேறிய முசுலீம்களுக்குத்தான் பிரச்சினை, இந்திய முசுலீம்களுக்குப் பிரச்சினை இல்லை’ என சங்க பரி வாரத்தினர் கூறிவருகின்றனர். ஆனால் உண்மையில் இவை இந்தியாவைச் சேர்ந்த பெரும்பான்மை இந்துக்களையும் பாதிக்கக் கூடியவை என்பதை நிரூபித்திருக்கிறது அசாம்.
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் அடிப்படையில் குடி யுரிமை அற்றவர்களாக்கப்பட்ட 19 லட்சம் பேரில் சுமார் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பதும் அதிலும் பெரும்பான்மையினர் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை அசாமில் மட் டும் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் அமித்ஷா.
தற்போது இந்தியா எங்கும் மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்த பின்னர், “தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத் துவது குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை என பொய்யுரைத்தார் மோடி: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யத் தயாராக இருப்ப தாக அறிவித்தார் அமித்ஷா .
இந்த அறிவிப்புகள் தற்போதைக்கு பிரச்சினையைத் தள்ளிப் போடுவதற் காகவே வெளியிடப்பட்டிருக்கின்றன என்பது சங்க பரிவாரத்தின் ‘நேர்மை’ குறித்த வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந் ததும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மோசடியான தீர்ப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு. குடியுரிமை திருத்தச் சட் டம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை சட்டப் பூர்வமாகவே இந்து ராஷ்டிர மாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது பாஜக.
ஆதார் தொடங்கி தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இனி வரவிருக்கும் மரபணு அடையாள மசோதா வரையில் அனைத்தும் நம்மை பார்ப்பனிய ஒடுக்குமுறை மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலின் கீழ் இருத்தி வைக்கவும் அவற்றுக்கு எதிராகத் திரண்டெழாத வகையில் நம்மைக் கண் காணிக்கவுமே கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்பதைத் தரவுகளோடு அம்பலப்படுத்துகிறது இந்த நூல்.
தோழமையுடன்,
புதிய கலாச்சாரம்.
***
குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! – புதிய கலாச்சாரம் ஜனவரி – 2020 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .
அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.
“ குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! ” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- குடியுரிமைச் சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல்!
- தேசிய குடிமக்கள் பதிவேடு: ஒரு கேடான வழிமுறை!
- ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?
- அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது!
- குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு!
- தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு!
- முஸ்லீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்!
- ஆதார் கண்காணிப்பு: மக்களை அச்சுறுத்தும் சர்வாதிகார அரசு அகண்ட பாரத கனவும் 40 இலட்சம் அசாமிய அகதிகளும்!
- ஆதார்: மாட்டுக்குச் சூடு! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!
- ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’: மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல்!
- அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள்: முஸ்லீம்களுக்கு எதிரான சதி!
- சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார்! மோடியின் அடுத்த அடி!
- அசாம்: 51 உயிரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு!
- அசாமைப் போல் கர்நாடகத்திலும் குடியேறிகள் தடுப்பு முகாம்!
- இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது!
- குடியுரிமை சட்டத் திருத்தம்: ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம்!
- நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா!
பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.
வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி:
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்:
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
____________
புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்