ந்தியாவில் சிறுபான்மை இசுலாமியர்கள். தலித்துகள் மீது கும்பல் கொலைகள் அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டி இதனை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் ராமச்சந்திர குஹா, சுமித்சர்க்கார், அஷிஷ் நந்தி போன்ற அறிவுத்துறையினர், அடூர் கோபாலகிருஷ்னன், மனிரத்னம், சுபாமுட்கல், ரேவதி, ஷ்யாம்பெனகல் போன்ற திரையுலக பிரபலங்கள், பினாயக் சென் போன்ற புகழ் பெற்ற மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தையே குற்றமாக்கி பிகார் மாநில போலீசு வழக்குப் பதிந்துள்ளது. 120-பி,153-பி, 290, 297, 504 ஆகிய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் தேசத்துரோகம், பொது அமைதியைக் குலைத்தல், மத உணர்வைப் புண்படுத்தல், பிரதமரை இழிவுபடுத்துதல் என மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

தேசியக் குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியே இந்த வேண்டுகோளை அவர்கள் அனுப்பியுள்ளனர். ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க.வினர் இத்தகைய கடிதத்தையும் விமர்சனத்தையும் குற்றமாகக்கருதுவது வியப்புக்குரியதல்ல. ஆனால், முசாபர்புர் நீதித்துறை நடுவர் எவ்விதப் பரிசீலனையுமின்றி வழக்குப் பதிய உத்தரவிடுவது மிகவும் ஆபத்தானது. தனக்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்களை மோடி அரசு நீதித்துறையைக் கொண்டே ஒடுக்க முயல்வதன் துலக்கமான உதாரணம்தான் இந்த வழக்கு. எந்தவொரு அடிப்படை ஆதாரமுமின்றியும், எந்தவொரு நியாயமான சட்டபூர்வ செயலையும்கூட குற்றமாக்கி தண்டிக்க மோடி அரசு தயாராகிவிட்டதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது. இந்தியாவின் மதிப்பை 49 பேரும் குலைத்துவிட்டதாக  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையாதெனில், சர்வதேச மனித உரிமைகள், இந்திய அரசியல் சட்டம், ஜனநாயக, தார்மீக நெறிகள் அனைத்தையும் நசுக்கி இந்தியாவைத் தலைகுனிய வைப்பது மோடி ஆட்சிதான்.  காஷ்மீரில் நடக்கும் கொடுமைகளை மோடியின் நண்பன் அமெரிக்காவே கண்டித்திருக்கிறது.

படிக்க:
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து ஆகப்பெரும்பாலான மக்கள் ஓட்டாண்டியாக்கப்பட்டுவரும் நிலையில் மக்கள் போராட்டங்களையும், போராளிகளையும் அச்சுறுத்தவே பிரபலங்கள் மீது வழக்குப் போடுகின்றனர். கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களும் மக்கள் உரிமைப் போராளிகளுமான வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 10 பேர் எந்த அடிப்படையுமின்றி இன்றுவரை சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். வரும் நாட்கள் மிகவும் ஆபத்தானவையாக மாறிவருகின்றன. எனவே மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறையை முறியடிப்பதே இன்றைய உடனடித்தேவை. பாசிசம் கோழைத்தனத்தின் வெளிப்பாடு. மக்கள் போராட்டத்தின் முன் தோற்றதுதான் அதன் வரலாறு.  எனவே பாசிச ஒடுக்குகுறையை முறியடிக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.

நன்றி.

காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க