நீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் !

கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி – இறுதி தீர்ப்பு : முடிவல்ல – தொடக்கம் !

  • அடுத்து மதுரா – காசி !
  • உச்சநீதிமன்ற தீப்பு : வரலாற்றின் அடிப்படையில் அல்ல புராணங்களின் அடிப்படையே !
  • வாழ்க்கைக்காக போராடும் மக்களை அடக்கி சொற்ப ஜனநாயக உரிமையை பறித்த காவி பாசிச ஆட்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது சிறுபான்மை இசுலாமிய மக்களின் உரிமையை பறிக்கும் விதமாகவும் புராண கட்டுக்கதைகளின் அடிப்படையில் உள்ளதை கண்டித்து திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக திருச்சி மரக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து முழக்க மிட்டு ஊர்வலமாக சிறிது தூரம் சென்று ராமகிருஷ்ணா தியேட்டர் அருகில் 19-11-2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்திய, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ராஜா,  ”பாபர் மசூதி இடிக்கப்பட்டது அநீதியானது, தீர்ப்பு பற்றி பேச கருத்து சுதந்திரம் இல்லை. போலீசு அனுமதி மறுக்கிறது ஆர்ப்பாட்டபோஸ்டர்களை கிழிக்கிறது” என கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் பல கட்சியினர், அமைப்பினர் கலந்துகொண்டதற்கு நன்றியும்தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தை கட்சியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தோழர் தமிழாதன் மற்றும் தோழர் லாரன்ஸ், முரசு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை, தந்தை பெரியார் திராவிடக் கழகம் மாநகரத் தலைவர் தோழர் வின்சென்ட், மக்கள் கூட்டணி தோழர் ஜோசப், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தோழர் சம்சுதின், தமிழ் புலிகள் கட்சியின் தோழர் ஜான் பாட்ஷா, ம.க.இ.க. மாவட்ட செயலர் தோழர் ஜீவா, தோழர் பாடகர் கோவன், புஜதொமு நிர்வாகிகள் தோழர் சுந்தர்ராஜ், உத்திராபதி, பழனிச்சாமி, மணலிதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

”மோடி அரசு இந்திய நாட்டில் பல மொழி, கலாச்சாரம் பேசும் நாட்டில் மக்களிடம் பகைமையை வளர்க்கும் விதமாக இந்த தீர்ப்பு உள்ளது. இதை வி.சி.க. சார்பாக கண்டிக்கிறோம். மக்கள் அதிகாரம் மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து நடத்துகின்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எங்கள் ஆதரவு எப்போது இருக்கும்” என தோழர் தமிழாதன் பேசினார்.

”முசுலீம் சட்டவாரியம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்கின்றனர். அதுவரை இந்த தீர்ப்பை அமுல்படுத்தக் கூடாது என்றும், Rss, BJP இந்தியாவில் இந்து ராஷ்டிடிரத்தை அமுல்படுத்துவதை அனுமதிக்கவிட மாட்டோம். சிறுபான்மை மக்களின் உரிமையை மறுக்கும் இந்த தீர்ப்பு மதச்சார்பற்ற நாடு மற்றும் அரசியலமைப்பின் மீது . நம்பிக்கையின் மீது விழந்த பேரிடியாக பார்க்க வேண்டுமென” தோழர் செழியன் பேசினார்.

முழக்கமிட்டு கொண்டே தோழர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். போலீசு ஊர்வலத்தை தடுத்தும், மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள், கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டனர்.

படிக்க :
♦ பாபர் மசூதி விவகாரம் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா | நேர்காணல்
♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் ! | காணொளி

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய தோழர்கள், தமிழ் புலிகள் கட்சி தோழர்கள், திராவிடர் விடுதலை கழகத் தோழர்களும் மண்டபத்திற்கு வந்து தங்களதுஆதரவை தெரிவித்து பேசினர். கொடி, பேனர் முழக்க அட்டை, முழக்கம் போன்றவை எழச்சியுடன் ஆர்ப்பாட்டம் இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டத்த உரைகளை நின்று கவனித்தனர்.

“இது முடிவல்ல ! தொடக்கம்… !” என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் சூளுரைத்தனர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி மண்டலம்,
திருச்சி – 94454 75157.
மணப்பாறை – 99443 55790.
கரூர் – 97913 01097.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க