யோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அறிவித்த உடனேயே, இது கடந்து செல்வதற்கான நேரம், முடிவுக்கான நேரம், தேசிய சிகிச்சை போன்ற கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வழிந்தோடின.

இந்தத் தீர்ப்பை ஒருமனதாக ஏற்று, கடந்த காலத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என தாராளவாதிகள் என்று அழைக்கப்படுவர்கள் இந்த வரிகளை முதன்மைப்படுத்தினர். அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்விளைவுகளில் அடக்கிக் காட்டின. காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று, தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி, அமைதியைக் கோரியது.

பாரதிய ஜனதா கட்சியின் உத்தியோகபூர்வ தொனியும் இணக்கமானது. விசுவாசிகள் வெற்றியாளர்களாக ஒலிக்க தங்கள் முயற்சியைச் செய்தார்கள், ஆனால் பிரதமர் நீதிமன்றங்களின் நடுநிலைமையை பாராட்டி, ‘ஒத்திசைவான கலாச்சாரம்’, ‘பன்முகத்தன்மையில் ஒற்றுமை’ என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தியதால், வெறுப்பு பிரச்சாரம் குறைந்தது. இடது, வலது மற்றும் மையங்களிடையே ஒருமித்த கருத்து இருப்பதாகத் தோன்றியது. இது ஒரு மகிழ்ச்சி அல்ல; ஆனாலும் ஒன்றாக வர வேண்டும். அது ஒரு மெய்நிகர் தேசிய குழு அணைப்பாக இருந்தது.

மிகவும் மனதைக் கவரக்கூடியதாக உள்ளது. ஒரு மாற்று சூழ்நிலையைக் கருத்தில் கொள்வோம்… இந்து அமைப்புகளின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் அறிவிக்கிறார்கள். மேலும், அந்த இடத்தை முசுலீம் வாதிகளுக்கு திரும்ப அளிக்கிறார்கள். அல்லது அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை முசுலீம்களுக்கு வழங்க வேண்டும் என்று சொன்னது, அதை முன்மாதிரியாகக் கொண்டு, இரண்டு தரப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு நிலமென பிரித்துக்கொண்டு, கோயிலையும் மசூதியை கட்டலாம் என தீர்ப்பளித்திருந்தால்…

பாபர் மசூதி குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பை செய்தித்தாளில் பார்க்கும் சாமியார்கள். (இடம் – அயோத்தி, படம் நன்றி : வயர்)

அப்போதும் இதுபோன்ற, இவ்வளவு தாராள மனப்பான்மை வெளிப்பட்டிருக்குமா? பக்தி மற்றும் சமரசத்தின் பல வெளிப்பாடுகளை நாம் கேள்விப்பட்டிருப்போமா? பாஜகவின் தலைவர்கள், அல்லது உண்மையில் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களிடமிருந்தும், தீர்ப்பையும் நீதிபதிகளின் மதிநுட்பத்தை புகழ்வதை இவ்வளவு வலுவாக வரவேற்று இருப்பார்களா? இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சில இடங்களில் இணைய தடையும் மும்பையில் அதிகப்படியான போலீசு பாதுகாப்பும் இருந்தது. அங்கு 1992-93 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரங்களின் வடு இன்னும் மறையவில்லை.

ஒருவேளை கற்பனை செய்துபாருங்கள் தீர்ப்பு வேறொரு பக்கமாக இருந்திருந்தால், மாநிலத்தின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும். வழக்கின் தீர்மானம் ‘இந்துக்களுக்கு’ திருப்திகரமாக இருந்தது; எனவே, அவர்கள் பெரிய மனதுடன் திளைப்பதில் வியப்பில்லை.

இது செயலற்ற ஊகம் அல்ல – இது துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் நிலவும் மிகக் கடுமையான யதார்த்தத்தின் பிரதிபலிப்பாகும். ‘தேசிய சமரசம்’ அல்லது உண்மையில் மூடல் என்பது பெரும்பான்மையினரின் கோரிக்கைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்போதுதான் நடக்கிறது. இது தாராள மனப்பான்மையுடன் பெரும்பான்மை சமூகம் பி, மற்றும் சி-தர குடிமக்கள் அனைவருக்கும் தரும் ஒரு சைகை ஆகும். குடியுரிமையின் படிநிலை பற்றி ஒரு மிருகத்தனமான பாடம் கற்பிக்கப்பட்ட பின்னர், மில்லியன் கணக்கான மக்கள் நபர்கள் அல்லாதவர்களாக மாற்றப்பட்டதற்கு பின்னர், இது கையளிக்க வேண்டிய பரிசாகும்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
♦ பாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை | காணொளி

உங்களுக்கு ஐந்து ஏக்கர் கிடைத்துள்ளது, இல்லையா? நீதிமன்றங்கள் மசூதி இடிப்பை சட்டவிரோத செயல் என்று கூறியுள்ளன, இல்லையா? குற்றவாளிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இல்லையா? பின்னர் ஏன் இந்த புகார்கள்?

எல். கே. அத்வானி தனது ரத யாத்திரையைத் தொடங்கியபோது பல மில்லியன் இந்தியர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டதன் வலி, வேர்வரை சென்றிருக்கிறது. இந்தப் பின்னணியில் ‘மூடுவதற்கான’ தாராள அழைப்புகளில் சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. இரத்த யாத்திரையின் சங்கிலி தொடர் நிகழ்வுகள் நம்மை இந்த நிலைக்கு, அது சாலையின் முடிவல்ல என்றபோதும் கொண்டுவந்துள்ளது. மசூதியை வீழச் செய்ததன் மூலம் நவீன இந்தியாவின் மேற்கட்டுமானத்தை இடித்த, அத்வானி அப்போது ஒரு போர்வீரர், தற்போது வெளியேற்றப்பட்ட ஒரு வழிகாட்டியாக சுருங்கிப்போயிருக்கிறார்.

அவரால் இதை சாதிக்க முடியவில்லை. ஆனால், அவரின் சீடர்; அவரை வழியிலிருந்து தள்ளிவிட்டு அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் கடந்து வெற்றி கண்டுள்ளார். முழுமையாக, உறுதியான தீர்மானத்துடன் நரேந்திர மோடி இந்தியாவை அனைத்து காலத்திற்குமாக மாற்ற விரும்பினார். மில்லியன் கணக்கான மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறது, அது மாறிவிட்டால் நிறுவனங்கள்கூட அவரை ஆதரிக்க காத்திருக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த நேரத்தில், எங்கள் கடந்த கால அனுபவங்கள் அனைத்தையும் மீறி, அவரை முக மதிப்பில் கொண்டு செல்வோம். மோடி உயர் பாதையில் செல்வதற்கு பெயர் பெற்றவர் – 2014 தேர்தலில் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியதைக் கண்டோம் – பின்னர் தேர்தல் பிரச்சாரங்களில் மோசமான சொல்லாட்சியை நோக்கிய கூர்மையான திருப்பத்தையும் கண்டோம்… அவர் இன்னும் ‘ஒத்திசைவு கலாச்சாரம்’ வரிசையில் ஒட்டிக்கொண்டிருக்கிறாரா அல்லது வேறு வடிவத்திற்கு மாறுகிறாரா என்பதை வரவிருக்கும் பல தேர்தல்கள் காட்டும்… ஆனால் அதற்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது.

இந்தத் தீர்ப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைமை திருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இதை வெற்றியாகவோ இழப்பாகவோ யாரும் பார்க்கக்கூடாது என்றும் சொன்னது. காசியும் மதுராவும்கூட இடித்து தள்ளப்படும் என முன்பு சொன்னதற்கு மாறாக, விசுவ இந்து பரிசத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அது தனது கடந்த கால திட்டம் எனவும் அது சொன்னது. இவை அனைத்தும் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியவையாக உள்ளன.

படிக்க:
கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !
♦ பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா ? நீதிபதி ஏ.கே.கங்குலி

ஆனாலும், சந்தேகப்பட மட்டுமல்ல கவலைப்படவும் இடமுண்டு. இவை தெளிவான நிகழ்ச்சி நிரலோடு, அந்த இலக்கை நிறைவேற்ற முன்னேற வேண்டும் என்ற உறுதியுடன் கூடிய நிறுவனங்கள். அவர்கள் இந்தியா பற்றிய ஒரு பார்வையை தங்கள் மனதில் வைத்துள்ளனர். அதை நோக்கி அவர்கள் திட்டமிட்டு, தேவைப்பட்டால், மூர்க்கமாகவும் நகர்வார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த

மசோதார், பொது சிவில் சட்டம் மற்றும் பல அந்த இலக்கை அடைவதற்கான படிகள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பல அரசியலமைப்பு விதிகளுக்கு ஒருபோதும் இணக்கமாக இருந்ததில்லை. மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நிச்சயமாக அந்த விரோதப் போக்கிற்கு வழிவகுக்கும். சில நடவடிக்கைகள், அயோத்தி வழக்கு போன்றவை பல தசாப்தங்களாக நடக்கும், மற்றவை அவசர வேகத்துடன் நடக்கும்.

தீர்மானம் மட்டுமல்ல, நல்லிணக்கமும் மறுசீரமைப்பும் இருக்கும்போது உண்மையான சிகிச்சைமுறை நிகழ்கிறது. இரண்டுமே அதிகமாக குறிப்பிடப்படவில்லை. வெற்றிகரமான தன்மை இல்லாதது எல்லாம் முடிந்துவிட்டதற்கான அறிகுறி அல்ல. இது நடவடிக்கைகளில் ஒரு மந்தமானது, மூச்சு பிடிக்க நேரம் தேவைப்படக்கூடியது. இதன் பொருள் என்ன என்பதற்கான முழு தாக்கங்களையும் நாடு இன்னமும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, அவர்கள் தீர்ப்பை தங்கள் மனதில் செயலாக்குவார்கள், மேலும் அவர்கள் எப்போதுமே தங்களுக்கு சொந்தம் என அழைத்த நிலத்தில் நிகழ்ந்த மாறுதல் நிலையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். இது முஸ்லிம்களுக்கு மட்டுமானது இல்லை – இனி யாராவது சிலரின் கண் சில தேவலாயங்கள் மீது பட்டு, அவற்றை வீழ்த்த கோரினால் அதை யாரால் தடுக்க முடியும்?

இல்லை, இது முடிவு அல்ல. இது ஒரு மைல்கல் – மற்றும் முக்கியமான ஒன்று, சந்தேகத்திற்கு இடமின்றி – ஆனால் நீண்ட பயணத்தில் உள்ள பலவற்றில் ஒன்று. இங்கிருந்து, இந்துத்துவா திட்டம் புத்துணர்ச்சியுடன் புதிதாகத் தொடங்கும்…


கட்டுரை : சித்தார்த் பாட்டியா
கலைமதி
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க