ரசியல் சாசன நிபுணரும் புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஏ.ஜி. நூரனி எழுதியுள்ள இந்தப் புத்தகம் உண்மையிலேயே அட்டகாசமான தொகுப்பு.

இந்தியாவில் தற்போது மிகச் சக்திவாய்ந்த அமைப்பாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்.-ன் துவக்கம் முதல் தற்போது வரையிலான வளர்ச்சியை படிப்படியாக விளக்குகிறார் நூரனி.

இந்தியாவின் கடந்த கால வரலாற்றை, அதிலிருந்த மகத்தான மனிதர்களான புத்தர், அசோகர், அக்பர், நேரு, காந்தி போன்ற மகத்தான மனிதர்களை அழிக்க முயல்வது ஏன் என விளக்குகிறார் நூரனி.

ஆர்.எஸ்.எஸ். ஏன் ஏற்படுத்தப்பட்டது, ஆர்.எஸ்.எஸ்.-ன் 19-ம் நூற்றாண்டுப் பாரம்பரியம், பிரிட்டிஷாருடன் இணக்கம், ஐரோப்பிய பாசிஸ்டுகளுடன் ஈர்ப்பு, இந்து மகாசபாவைக் கைப்பற்றும் சாவர்க்கர், சுதந்திரத்தின் போது அந்த அமைப்பு என்ன செய்தது, காந்தி கொலையில் பங்கு, ஆர்.எஸ்.எஸ் மீதான தடைகள், ஜனசங்கத்தின் உருவாக்கம், நெருக்கடி நிலை காலகட்டத்தில் அதன் செயல்பாடு, அதன் வன்முறை, அதன் துணை அமைப்புகள் என விரிவாக விவரிக்கிறார் நூரனி.

“தற்போது அபாயத்தில் இருப்பது இந்தியக் கனவல்ல; இந்தியாவின் ஆன்மா” என்று குறிப்பிடும் ஏ.ஜி. நூரனியின் இந்தப் புத்தகம் சமகால இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள முக்கியமான ஒரு கருவி.

படிக்க :
♦ சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

ஏகப்பட்ட வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகம் 547 பக்கங்களைக் கொண்டது. லெஃப்ட் வேர்ட் வெளியீடு.

1500 ரூபாய்க்கு முதலில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது 521 ரூபாய்க்கு அமெஸானில் கிடைக்கிறது. Don’t miss it!!

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க