ம்பம் நகரில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி முஸ்லீம் அமைப்புகள் , மக்கள் அதிகாரம், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாபெரும் எழுச்சிப் பேரணி கடந்த டிசம்பர் 15, 2019 அன்று காலை நடைபெற்றது.

இந்தப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு விடுக்கப்பட்ட அறைகூவலைத் தொடர்ந்து கம்பம் தபால் நிலையம் அருகில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர். அதன் பின் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்த போலீசு ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யத் தொடங்கியது. கைது செய்யப்பட்டவர்கள் அப்பகுதிகளில் இருந்த தனியார் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மதியம் ஒரு மணியளவில் மண்டபங்களில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கம்பம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க