PP Letter head தேதி : 02.01.2020

பத்திரிகை செய்தி

திரு. நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும், மிகவும் தொலைவில் உள்ள சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!

திரு. நெல்லைக் கண்ணன்.

மிழகம் நன்கறிந்த இலக்கியக் சொற்பொழிவாளரும், காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைவர்களில் ஒருவருமான நெல்லை கண்ணன் அவர்கள் எவ்வித உள்நோக்கமின்றி மோடி, அமித்ஷா குறித்து வேடிக்கையாகப் பேசியதைக் காரணம் காட்டி குற்றம் புரியத் தூண்டுதல், இருவேறு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது ஆகிய பிரிவுகளின் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க பாஜக -வினர் செய்த ரவுடித்தனத்திற்குப் பிறகு பணிந்து தமிழகக் காவல்துறை எடுத்திருக்கும் அநியாயமான நடவடிக்கை.

திரு. நெல்லை கண்ணன் அவர்கள் பேசியதைவிட மிகக் கொடூர வன்மத்துடன் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பாஜக-வினர் பேசி வருவது மட்டுமல்லாது பல கொலைகளையும் பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் அரங்கேற்றி வருகின்றனர். அவ்வாறு கொலை செய்தவர்களுக்கு  பாஜக அமைச்சரே மாலை போட்டு வரவேற்கிறார். தமிழகத்தில் பாஜக-வின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கவிஞர் வைரமுத்துவைக் கொலை செய்ய வேண்டுமென்று பகிரங்கமாகப் பேசினார்.

எச்.ராஜா மாணவர்கள் போராட்டத்தின் போது கல் வீசுபவர்கள் மீது குண்டு வீசுவோம் எனப் பேசினார். மெரினாவில் எவ்விதப் போராட்டமும் நடத்தக் கூடாது என உயர்நீதிமன்றத் தடை இருக்கும் போது அதை துச்சமாக மதித்து எச்.ராஜா, இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இவற்றை காவல்துறை சற்றும் கண்டுகொள்வதில்லை. தமிழகக் காவல்துறை முழுவதும் பாஜக-வின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது.

படிக்க:
நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !
♦ பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !

திரு நெல்லை கண்ணனைக் கைது செய்யும் போது பாஜக காலிகள் அவரைத் தாக்க முனைந்தபோதும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, திரு நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும் அவரை துன்புறுத்தும் நோக்கில் வயது முதிர்ந்த ஒரு தலைவரை தொலைதூர சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் மீதான வழக்கை உடனே திரும்பப்பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டுமெனெ வலியுறுத்துகிறது.

ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும், பாஜகவின் அடியாளாகவும் செயல்படும் தமிழகக் காவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறது.

தோழமையுடன்
தோழர் காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க