குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்றுவரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்களும் போராடத்தொடங்கியுள்ளனர். கடந்த ஜனவரி-03 அன்று சென்னை, திருச்சி, கோவை மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

சென்னை:

“மகத்தான நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில், சென்னை வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயிலில் 03.01.2020 அன்று காலை 10.30 மனியளவில் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் CAA – NRC – NPR ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்”, ”நான் இந்தியக் குடிமகன்” என்பது உள்ளிட்ட முழக்க பதாகைகளைத் தாங்கி நின்றனர். இதில் மூத்த வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கோவை:

”ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கு” – கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு 03.01.2020 அன்று வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருச்சி:

”மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தாதே! இந்தியாவை மதவாத நாடாக மாற்றாதே!! மக்களை முள்வேளிக்குள் அடைக்காதே!” – திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கும்பகோணம்:

”2020 – மகிழ்ச்சியில்லா புத்தாண்டு” – கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொகுப்பு :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க