தோழர் ஸ்டாலின்…

ரஷ்யாவை குறுகிய காலத்தில் எல்லா தளங்களிலும் வலுவான நாடாக்கி காட்டியவர், வறிய நாடுகளின் குழந்தைகள் அறிவைப் பெற பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மிட்டாய் வாங்கும் காசில் புத்தகங்கள் கிடைக்க செய்தவர், அவர்கள் மொழியிலேயே கிடைக்கச் செய்தவர்.

உலகை ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து காத்தவர், அதன் காரணமாக ரஷ்யா லட்சக்கணக்கான வீரர்களையும் மக்களையும் இழந்தது, அதில் ஸ்டாலினின் மகனும் அடக்கம்.

அந்தக் கொடிய இரண்டாம் உலகப்போர் காலத்தில்தான் ரஷ்யாவை நிஜமான வல்லரசாக மாற்றிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாளித்துவத்தால் உலகில் அதிகம் எதிர்ப் பிரச்சாரம் செய்யப்பட்ட தலைவர், அதிகம் வாசிப்பு இல்லாத கம்யூனிஸ்ட்களே நம்பும் அளவுக்கு இருந்தன அத்தகைய பிரச்சாரங்கள்.

அப்படி முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்த தோழர் ஸ்டாலினின் நூல்களின் தொகுப்பு அலைகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது, பதிப்புக்கு ஆதரவளியுங்கள், ஸ்டாலினை வாசியுங்கள்.

அவரை உலகம் புரிந்துகொள்ள வேண்டியது முன்னெப்போதையும்விட இன்று அவசியமாகிறது.

படிக்க :
♦ சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !
♦ நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

முகநூலில் – வில்லவன் ராமதாஸ்