சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் : வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35

கடை எண் : 182, 183

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …

புதிய வெளியீடுகள் :

ஜே.என்.யு: மக்கள் பல்கலைக்கழகம் என்ற பெருங்கனவு!

ட்டுரையாளர் சௌ.குணசேகரன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணை பேராசிரியராக பணியாற்றிவருகிறார். ஜே.என்.யு குறித்து வினவு தளத்துக்கு இவர் எழுதிய கட்டுரைத் தொடரினை கீழைக்காற்று வெளியீட்டகம் தனி நூலாக கொண்டு வந்திருக்கிறது.

ஜே.என்.யு. பல்கலையில் கல்வி கட்டண உயர்வு மற்றும் ஏற்கெனவே அமலில் இருந்த சில நடைமுறைகளை தன்னிச்சையாக ரத்து செய்த நடவடிக்கைகளை எதிர்த்த போராட்டமாக தொடங்கியது. உள்ளிருப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம், பாராளுமன்றம் நோக்கி பேரணி என 40 நாட்களை கடந்து மாணவர்களின் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது.

நாட்டிலுள்ள மற்ற பல்கலைகழகத்தின் வளாகச் சூழலிலிருந்து ஜே.என்.யு. பல்கலைக் கழகம் எவ்வாறெல்லாம் மாறுபட்டது? ஜே.என்.யு.வுக்கென்றே உள்ள தனிச்சிறப்பான சட்டவிதிகளின் (JNU Ordinance) அடிப்படை அம்சம் என்ன? மாணவர்களுக்கான தேர்தல் முறையில் கடைபிடிக்கப்படும் வெளிப்படைத்தன்மை, பிரதிநிதித்துவம் மற்றும் அதன் முன்னுதாரணமான அம்சங்கள் என்ன? தேர்வு மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வழக்கமாக கடைபிடிக்கப்படும் முறைகளிலிருந்து மாறுபட்டு மாணவர்கள் எவ்வாறு மதிப்பிடபட்டார்கள்? சுதந்திமாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும், கவுரமான முறையிலும் மாணவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்? என்பதை பல்வேறு நடைமுறை உண்மையிலிருந்து விளக்குகிறார்.

மேலும், இதுபோன்ற ஜே.என்.யு.வின் தனித்துவம் வாய்ந்த அதன் சிறப்பியல்புகளை சிதைக்கும் வகையில் தற்போதைய துணைவேந்தர் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டார், அதன் அரசியல் பிண்ணனி என்ன? பின்னிருந்து இயக்குபவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்டுகிறார், கட்டுரையாளர்.

பக்கங்கள்: 24
விலை: ரூ.20.00


சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் !
– ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்!

புதிய ஜனநாயகம் இதழில் ஏப்ரல், மே, நவம்பர் – 2018 மற்றும் ஜனவரி – 2019 மாதங்களில் தொடராக வெளியான கட்டுரை.

ஃபிரட் எங்ஸ்ட் உடனான இந்த நேர்முகத்தை ஒனுர்கன் உல்கர் 2017, ஏப்ரல் 7-ம் தேதியன்று பெய்ஜிங்கில் எடுத்துள்ளார். 1952-இல் பிறந்த ஃபிரட் எங்ஸ்ட், சீன பண்பாட்டுப் புரட்சியின்போது செங்காவலராக இருந்தவர். பின்னர் ஐந்து ஆண்டுகள் ஆலைத் தொழிலாளியாக சீனத்தில் பணியாற்றியவர். தற்பொழுது, பெய்ஜிங் பல்கலைகழகமொன்றில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

துருக்கியில் பிறந்த ஒனுர்கான் உல்கர், பீகிங் பல்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றதோடு, சீனத்தில் ஆய்வாளராகவும், ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.

எங்ஸ்ட்-ன் இந்த நேர்முகம், நேரடி அனுபவத்தின் அடிப்படையிலும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலும் சீனாவில் சோசலிசத்தை கட்டியமைப்பது பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த புரிதல்களை வழங்குகிறது.

பக்கங்கள் : 40
விலை: ரூ. 30.00


மறுபதிப்பு :

பிரடெரிக் எங்கெல்ஸ் : – வி.இ.லெனின்.

வம்பர் – 28, 2019 – பிரெடெரிக் எங்கெல்ஸின் இருநூறாவது பிறந்த தினம். இவ்வாண்டை சிறப்பாக்கும் வகையில், எங்கெல்சை அரசியல்ரீதியாக அறிமுகம் செய்யும் லெனின் எழுதியுள்ள இந்த நூலை மறுபதிப்பு செய்திருக்கிறது, கீழைக்காற்று வெளியீட்டகம்.

இந்நூலில், தொழிலாளி வர்க்கத்துக்கு பிரடெரிக் எங்கெல்ஸ் வகுத்தளித்த விடுதலை தத்துவத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கிறார், லெனின். தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளவும் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளவும் உதவி செய்கிறது.

கார்ல் மார்க்சின் இணையபிரியா நண்பராக மட்டுமல்ல, கம்யூனிசத் தத்துவத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலமைந்த அறிவியலாக, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராயுதமாக, மார்க்சுடன் இணைந்து வளர்த்தெடுத்தவர் பிரெடெரிக் எங்கெல்ஸ்.

”தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் அறிவியலை நிலைநாட்டினார்கள். ஆகவேதான், எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும்.” என்கிறார் லெனின்.

பக்கங்கள்: 16
விலை: ரூ.15.00


 

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க