தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி?

”புதிய ஜனநாயகம்” இதழில் 2003 – ஜூலை முதல் நவம்பர் வரையிலான இதழ்களில் வெளியான தொடர்கட்டுரையின் மறுபதிப்பு.

… ”பித்தலாட்டக்காரர்களின் கடைசிப் புகலிடம் தேச பக்தி” என்று முதலாளிய அறிஞர் ஜான்சன் கூறினார். ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிச – பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு இது முழுமையாகப் பொருந்தும். பார்ப்பன மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது நாட்டிற்கு – தேசத்திற்கு எதிரான துரோகம் என்று சித்தரிப்பதன் மூலம் நாட்டுப்பற்று – தேசப்பற்று என்பதைக் கேடாகப் பயன்படுத்துவதைத் தமது மூல உத்தியாகக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, தேசதுரோக முத்திரை குத்தி தனது எதிராளிகளை ஒழிப்பது எளிய வழி என்று கண்டுள்ளனர். இதோடு கூடவே தனக்கு எதிரானவற்றை அந்நிய ஊடுருவல், அந்நிய ஆக்கிரமிப்பு, அந்நிய சதி என்று முத்திரை குத்தி தேசியவெறியூட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

… ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னை ஒரு தேசியவாதப் பண்பாட்டு, சமூக இயக்கம் என்று கூறிக்கொள்கிறது. அதேபோல பாரதிய ஜனதா கட்சி தான் ஒரு சுயேட்சையான அரசியல் கட்சி என்று கூறிக்கொள்கிறது. இந்த இரண்டு கூற்றுமே உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ்-இன் ஒரு அரசியல் பிரிவுதான் பாரதீய ஜனதா கட்சி. இரண்டுக்குமே இந்து மதவெறி பாசிசக் கொள்கையான “இந்துத்துவம்” தான் வழிகாட்டும் சித்தாந்தம், இந்து ராஷ்டிரம்தான் இலட்சியம்.

… பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் முன்பு ஒருமுறை சொன்னார்:

”வெள்ளைக்காரன் ஒரு நல்ல காரியம் செய்தான். நெடுஞ்சாலைகளில் மைல் கல்லை நட்ட வெள்ளைக்கான் அதில் வெள்ளையடித்து ஊர், பேர், தூரத்தை எழுதி வைத்தான். இல்லையானால் நம்ம ஜனங்க அதற்குப் போய் பொட்டு வைத்து, மாலை போட்டு மைல்சாமி ஆக்கி இருப்பான்” நமது பாமர மக்களின் பக்தி எத்தகையது என்பது குறித்து கிண்டலாகப் பேசிய ஈ.வெ.ரா.தான் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு, நாத்திகப் பிரச்சாரம் செய்து அந்த மூட நம்பிக்கையை ஒழிக்க அரும்பாடுபட்டார்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். கும்பலோ அந்தப் பாமரப் பக்தர்களிடையே நிலவும் பக்தி உணர்வை மேலும் ஆழப்படுத்தி, பரவச்செய்து தமது பாசிச அரசியல் பேராசைகளை ஈடேற்றிக் கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆகிய வகுப்புவாத மதவெறி சக்திகளை முறியடிப்பதே தமது நோக்கமென்று கூறிக்கொள்ளும் மதச்சார்பற்ற அல்லது மதநல்லிணக்க அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் பாமர மக்களிடையே நிலவும் மதம், கடவுள், பக்தி உணர்வுகளை பாதித்து விடாமல் – வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்ற அணுகுமுறையின் மூலம் அதைச் சாதித்துவிட எத்தனிக்கிறார்கள்.

ஆனால், தேவையானது ஊசி – வாழைப்பழ அணுகுமுறை அல்ல; அறுவைச் சிகிச்சை!

பக்கங்கள்: 40
விலை: ரூ.30.00


ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின்
ஆரிய – பார்ப்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

டைக்க முடியாத கற்கோட்டையாக இருந்த தமிழகத்தை உடைத்து விட்டோம் என்று மார்தட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். நாம் என்ன செய்யப் போகிறோம்?

உடைக்க முடியாத இந்தக் கற்கோட்டையில் சாந்தாகப் பூசப்பட்டிருக்கிறது நம் முன்னோர்களின் ரத்தம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய வள்ளுவன் முதல் “இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ? என்று பார்ப்பனியத்தின் மீது சாட்டையடி கொடுத்த சிவவாக்கிய சித்தர் வரையிலான அறிஞர்கள்; பர்ப்பன மதத்தை எதிர்த்த குற்றத்துக்காகவே கழுவிலேற்றப்பட்ட சமணர்கள், துரத்தியடிக்கப்பட்ட பவுத்தர்கள், ஆசீவகர்கள், தலைமறைவாய்க் காடுகளில் திரிய நேர்ந்த சித்தர்கள்; சாதிக்கெதிராகக் கலகம் புரிந்து கொலை செய்யப்பட்டு இன்றும் நாட்டார் தெய்வங்களாக நம்மை எச்சரிக்கும் மதுரை வீரன், முத்துப்பட்டன், ஒண்டிக் கருப்பு முதலானோர்; தமிழ் மக்களைத் தலைநிமிரச் செய்த தந்தை பெரியார்! இத்தகைய பெருமை மிக்க நீண்ட மரபின் வாரிசுகளாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?

… “ஏதோ இயன்றதைச் செய்வோம் என்று முனகிப் பயனில்லை. இது போர்க்களம்; இங்கே எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்தாக வேண்டும். பெரியாரை இனிமேல்தான் படிக்க வேண்டிய தமிழகத்தின் இளைய தலைமுறை முதல், பெரியாரைப் பார்த்தறிந்த முதியோர் வரை அனைவரும் இந்தப் போர்க்களத்தின் வீரர்களாக முடியும். போர்க்களத்தில் ஆயுதமேந்தி நிற்கும் முன்னணிப் படைக்கு ஆயிரம் வழிகளில் துணை நிற்க முடியும்.

எதிரியிடம் பணபலமும், பத்திரிகை பலமும், படைபலமும் கூட இருக்கலாம்; ஆனால் நீதி நம் பக்கமிருக்கிறது. இன்று எதிரியின் பின்னால் மக்கள் மயங்கி நடக்கலாம்; ஆனால் எல்லா மயக்கங்களையும் தெளிய வைக்கும் சித்தாந்தம் நம்மிடம் இருக்கிறது.

… இதோ, இங்கேதான் பார்ப்பனியம் புதைக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுப் பெருமையை தமிழ்மண் தன்மீது பொறித்துக் கொள்ளட்டும்!

பக்கங்கள் : 72
விலை: ரூ.50.00


கண்ணை மறைக்கும் காவிப்புழுதி

ருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுமளவுக்கு பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்டுகள் வளர்ந்து விட்டார்கள். இது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சிகளோடு மட்டும் தொடர்புடையதல்ல. அதற்கு சமீபத்தில் வந்த அயோத்தி தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு.

… மக்களிடையே நிலவும் மத நம்பிக்கை என்பதை பயன்படுத்தி இந்து மதவெறியர்கள் ஏராளமான பொய் பிரச்சாரங்களை இலகுவாக கலக்கச் செய்து விடுகின்றனர். ஒரு சராசரி முசுலீம் குறித்து ஒரு சராசரி ‘இந்து’ இப்படித்தான் சிந்திக்கிறான். அப்படி பொது மக்களிடம் நிலவும் அவதூறுகளை பட்டியலிட்டு அதன் பொய்மையை இந்த நூல் போட்டுடைக்கிறது. சிறுபான்மையினர் மீதான இந்து மதவெறியரின் வெறுப்பு என்பது பெரும்பான்மையாக இருக்கும் சூத்திர, பஞ்சம மக்கள் மீதும் உள்ளது என்பதை இந்த நூல் நிரூபிக்கிறது.

… இந்தியாவில் நிலவும் பல்வேறு மொழி, மத, இன மக்களின் பண்பாட்டை அழித்து விட்டு இந்து மதவெறியர்கள் உருவாக்க நினைக்கும் பாரதப் பண்பாட்டின் அயோக்கியத்தனத்தையும் இந்த நூலின் கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.

பக்கங்கள்: 160
விலை: ரூ.100.00


பொது சிவில் சட்டம்  – மாயையும் உண்மையும்

னது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ‘இந்து தனிநபர் சட்டம் ‘ ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே “இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை” என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.

இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் – மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.

பக்கங்கள்: 64
விலை: ரூ.50.00


சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் : வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35

கடை எண் : 182, 183

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க