மைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களுக்கு எதிராக பார்ப்பன பாசிஸ்டு குண்டர்கள் நடத்தியிருக்கும் வன்முறை, பாசிசத்தின் வெளிப்படையான பிரகடனம்.

குருதி கொப்புளிக்க கீழே விழுந்து கிடக்கும் இசுலாமியரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு தாக்கும் காட்சி, குஜராத் இனப்படுகொலைக் காட்சியை நினைவுபடுத்துகிறது.

முஸ்லீம் ஒருவரை கொலைவெறியோடு தாக்கும் காவிக் கும்பல்
முஸ்லீம் ஒருவரை கொலைவெறியோடு தாக்கும் காவிக் கும்பல்

போலீசு காவல் நிற்க, கைத்துப்பாக்கியுடன் பஜ்ரங் தள் குண்டர்களே துப்பாக்கிச் சூடு நடத்துவது என்ற வழிமுறையை டில்லியில் தொடங்கியிருக்கிறார்கள்.

போலீசுக்கு உத்தரவிடும் சம்பிரதாயத்துக்குக் கூட உயரதிகாரிகள் தேவையில்லை, பாஜக வின் ஒரு உள்ளூர் தாதா போதும் என்பது புதிய வளர்ச்சி.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் பரவும் வன்முறை – என்று காவி வண்ணத்துக்கு கட்சி மாறுகிறது சன் டிவி. குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை என்பது மற்ற ஊடகங்களின் தலைப்புச் செய்தி.

அமைதியாகப் போராடி வந்த முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக குண்டர்களின் தாக்குதல் – என்ற அளவில் கூட செய்தி வெளியிடும் நேர்மை ஊடகங்களிடம் இல்லை.

படிக்க :
♦ படித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் !
♦ நூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்

ஆர்.எஸ்.எஸ்-ன் சமூக ஊடக பொய்ப்பிரச்சாரங்களோ, தாக்குதல் தொடுத்தவர்களே முஸ்லிம்கள்தான் என்ற பச்சைப் பொய்யைப் பரப்புகின்றன.

குடியுரிமைப் பதிவேடு அமலுக்கு வருவதற்கு முன்னரே, முஸ்லிம்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக்கப் படுவதைப் பார்க்கிறோம்.

ஆம். பார்க்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல்தர குடிமக்கள் என்று தம்மைக் கருதிக் கொண்டிருப்போர், இரண்டாந்தரத்தினர் தாக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முஸ்லிம்களுக்கு எதிராக நீட்டப்படும் துப்பாக்கி, உங்களையும் குறி வைக்குமுன் விழித்துக் கொள்ளுங்கள்.

இத்தனை நாட்களாக முஸ்லிம் மக்கள் நடத்திய போராட்டம், அவர்களுக்கானது மட்டுமல்ல, போராடத்தவறிய பெரும்பான்மையினருக்கானதும்தான். அவர்களுக்காக குரல் கொடுப்பதென்பது நம் அனைவருக்காகவும் குரல் எழுப்புவதாகும்.

டில்லி வேறு,  தூத்துக்குடி வேறு அல்ல. குரலெழுப்புவோம் ! போராடுவோம் !