மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களுடனும், ஜனநாயக சக்திகளுடைய ஒத்துழைப்புடனும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கால் துயருற்று வரும் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

***

சென்னை முகப்பேர்- நொளம்பூர் கொரோனா ஒழிப்பு உதவிக்குழு சார்பில்
முகப்பேர் – கெங்கையம்மன் நகர் பகுதியில் கபசுரக் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. 200 பேர் வரை மக்கள் ஆர்வமுடன் வாங்கி குடித்தனர்.

நொளம்பூர் பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளர்களுக்கு 9 நாட்கள் உறவுகள் என்ற டிரஸ்ட் மூலம் உணவு பெற்று வழங்கப்பட்டது. 150 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

சென்னை, ஓசாங்குளம், புதிய பூபதி நகர் மற்று புல்லாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் 400-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

சென்னையில் தங்கியுள்ள தெலுங்கு பேசும் கட்டிட தொழிலாளர்களுக்கு 200 பேருக்கு பத்து நாட்களாக உணவு விநியோகிக்கப்பட்டது.

சென்னை சேத்துப்பட்டு பகுதிக்கு அரசு சார்பில் நடமாடும் காய்கறி வண்டி தெருவிற்கு வந்தது. பகுதி குழு சார்பில் அது ஒழுங்குபடுத்தப்பட்டது.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் வசிக்கும் மாற்று திறனாளிகள் 20 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் 10 நாட்களுக்கு பயன்படும் வகையிலானவை “முகப்பேர்- கொரோனா உதவிக்குழு”வின் சார்பாக வழங்கப்பட்டது.

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். 350 மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அவர்கள் கடந்த 20 நாட்களாக வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு ரகுநாத் என்பவர் மதிய உணவு ஏற்பாடு செய்துவருகிறார்.

முகப்பேர் – நொளம்பூர் பகுதி கொரோனா- உதவி குழு உறுப்பினர்கள் மூலமாக மூன்றாவது நாளாக மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. மக்கள் வரிசையில் நின்று 200 பேர்வரை வாங்கிச்சென்றனர்.

மேற்கு வங்கம், அசாம், போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் சென்னை முகப்பேர் கலெக்டர் நகர் பகுதியில் வசித்து வருக்கின்றனர். இவர்கள் அனைவரும் உணவகத்தில் வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக உணவகம் மூடிய நிலையில், ஊருக்கு திரும்பி போக முடியாத நிலையில் உள்ளனர்.
இவர்களுக்கு கோதுமை, அரிசி, எண்ணெய் போன்ற உணவு பொருட்கள் முகப்பேர் பகுதி கொரோனா – உதவி குழுவின் சார்பாக வழங்கப்பட்டது.

சென்னை, சேத்துப்பட்டில் உள்ள பள்ளி கூடச்சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் உள்ள ரெயின்போ பெண்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கும் மற்றும் மாணவர்களின் இல்லத்திற்கும் மக்கள் அதிகாரம் சார்பாக உணவு பொருட்கள் பருப்பு, எண்ணெய், சோப்பு மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டது.

முகப்பேர் பகுதியில் வசிக்கும் நேபாளத்தை சேர்ந்த 4 குடும்பங்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக அரிசி வழங்கப்பட்டது.

சென்னை மக்கள் அதிகாரத்தின் சார்பாக முகப்பேர் மேற்கு பகுதியில் மாநகராட்சி தொழிலாளர்கள், தெலுங்கு பேசும் தொழிலாளர்கள், ATM காவலாளர்கள், சாலை ஓர கடை வியாபாரிகள் என 100-க்கும் மேற்பட்டோர்க்கு முககவசம் அளிக்கப்பட்டது

காஞ்சிபுரம் மக்கள் அதிகாரம் சார்பில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு காவல் அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள், பாதுகாவலர்கள் என 200 பேருக்கு கொடுக்கப்பட்டன.

காஞ்சிபுரம், அய்யங்கார்குளம் பகுதி ஊராட்சி மன்றத்தின் கிளர்க் புவனா அவர்களிடம் மக்கள் அதிகாரம் சார்பாக 75 முககவசம் ஒப்படைக்கப்பட்டது.

சைதாப்பேட்டை பகுதியில் துப்புரவு தொழிலாளர்கள், காய்கறி வியாபாரிகள், சிறு வணிகர்கள் முதியோர்கள், மற்றும் பொது மக்களுக்கு முக கவசம் (துணி வாங்கி தைத்த) வழங்கப்பட்டது.

நொளம்பூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் வாசலில் கபசூர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. 200 மேற்பட்டோர் வாங்கி குடித்து பயனடைந்தனர்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தினக்கூலியாக வேலை செய்யும் 6 நபர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டு (4000 ரூ பெருமானமுள்ள) மளிகை பொருட்கள் பொருட்கள் சைதை – கொரோனா தடுப்பு உதவிக்குழு மூலம் விநியோகிக்கப்பட்டது.

ஆரணி பகுதியில் மக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

முகப்பேர் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர், விதவை பெண்கள், ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் 500க்கு மேற்பட்ட வீடுகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

விருத்தாச்சலத்தில் 1000 வீடுகளுக்குகிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

விருத்தாச்சலத்தில் 500க்கும் மேற்பட்டோர்க்கு கபசுர குடி நீர் வழங்கப்பட்டது.

விருத்தாச்சலத்தில் ஆட்டோ தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர்க்கு அரிசி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டன.

விருத்தாச்சலம் கோ. பூவனூர் கிராமம் முழுவதும் கிருமிநாசினி எல்லா இடங்களிலும் தெளிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டணர். சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கிருமிநாசினி தெளித்தனர், இப்பணியை ஊர் பொது மக்கள் வரவேற்றனர். மேலும் இதேபோன்று தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

நாகை – சீர்காழி தாலுக்கா எடமணல். கிராமத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் எடமணல் கிராம இளைஞர்களும் சேர்ந்து கரோனா வைரஸ். தொற்று ஏற்படாமல் தடுக்க கிருமிநாசினியை 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் தெளித்தனர்.

புதுச்சேரி மதகடிபட்டு பகுதியில் உள்ள சிறு கடை வியாபாரிகள் மற்றும் மக்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் துணியால் தயாரிக்க பட்ட முக கவசம் (மாஸ்க்) 400 எண்ணிக்கையில் வழங்கபட்டது.

புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சின்னபாபு சமுத்திரம் கிராம மக்களுக்கு இயற்கை கிருமி நாசினி வழங்கபட்டது.

திருச்சி – கொரனோ வைரஸ் தாக்குதல் 144 தடை உத்தரவையொட்டி, திருச்சி, துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் பிகார் மாநிலத்தை சேர்ந்த தினக்கூலிக்கு வேலைக்கு செல்ல கூடிய தொழிலாளர்கள்; இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் 20 பேர் மற்றும் BHELஆர்டர் பெற்று இயங்கும் சிறு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் பெயிண்டர், கொத்தனார், சித்தாள், வேலை உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் வேலையின்றி அன்றாட வயிற்று பிழைப்புக்கே வழியின்றி தவித்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு நிதி சேகரித்து 31/03/2020 அன்று அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் , காய்கறி உள்ளிட்ட 9 வகையான(1000 ரூபாய் மதிப்புள்ள) உணவு பொருட்களை நாற்பது குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது உதவிகளை பாய்லர் பிளாண்ட் ஓர்க்கர்ஸ் யூனியன் மற்றும் SDPI, இசுலாமிய அமைப்புகள் மற்றும் நண்பர்கள் செய்து வருகின்றனர்.

மதுரை – உசிலை முண்டு வேலம்பட்டியில் 400 முகக்கவசங்ககள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

நெல்லை பகுதியில் தொடங்கப்பட்ட கொரோனா மக்கள் பாதுகாப்பு குழுவின் சார்பாக திரட்டப்பட்ட நிதியில் இருந்து முதல்கட்டமாக ஆரோக்கியநாதபுரம் பகுதியில் கபசுர குடிநீர் இளைஞர்களின் பங்களிப்புடன் 1000-க்கு மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் கிராமத்தில் கொரோனா தடுப்புக் குழு சார்பாக கபசுர குடி நீர் 400 பேருக்கு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொரோனா தடுப்புக் குழு சார்பாக 100 முதியோர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. கரைப்புதூர் கிராமத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் அவ்வூர் இளைஞர்களும் இணைந்து கொரோன தடுப்புக் குழு ஏற்படுத்தியுள்ளனர். 1000 வீடுகளுக்கும், ஊர் முழுக்கவும் கிருமி நாசினி தெளித்துள்ளனர்.

தருமபுரியில் 200 முககவசங்கள் தயாரித்து முதல் கட்டமாக தருமபுரி மாவட்ட தலைமை அரசு மருந்துமனை பணியாளர்கள், மற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது.

கொரானா ஒழிப்பு நிவாரண பணிகுழு, மற்றும் கள்ளிபுரம் பகுதி இளைஞர்
சார்பாக, கொரானா தடுப்பு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர் கள்ளிபுரம் பகுதியில் 1000 பேருக்கு மூன்று நாட்கள் கொடுக்கப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க