விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் காரப்பட்டு கிராமம் சார்பாக கோவில் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றினைந்து “நமக்கு நாமே கரம் கோர்ப்போம்! கொரோனா வறுமையை பகிர்ந்து கொள்வோம்!!” என்ற பதாகையின் கீழ் 05.05.2020 காலை 10 மணியளவில், 10 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் கடலை எண்ணை என வீடு வீடாக சென்று கொடுக்கப்பட்டது.

இதற்கான தொகை அரசு உதவியோ அல்லது தனிநபர் மூலம் நன்கொடை பெற்றோ செய்யவில்லை, மாறாக காரப்பட்டு கிராமத்தில் வசிக்கும் மக்கள், கோவில் திருவிழாவிற்காக சேமித்துவைத்த சுமார் 1-லட்சம் ரூபாய் வீணாக முடங்கி கிடப்பதைவிட அல்லது திருவிழா என்ற பெயரில் அதிக ஆடம்பரம் செய்வதைவிட இந்த கொரோனா வறுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு முற்போக்கான விசயத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

குறிப்பாக காரப்பட்டு மாரியம்மன் கோவில் நிர்வாக குழுவில் உள்ளவர்கள் கடவுள் பக்தி என்று இருந்தாலும், பகுத்தறிவோடு இந்த தருணத்தில் செயல்பட்டது மக்கள் மத்தியிலும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியிலும் அக்கம் பக்கத்து கிராமங்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
காரப்பட்டு.