புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பாக கொரோனா ஊரடங்கு பாதிப்பில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.15,000/- நிவாரணம் வழங்கு! ஆட்டோக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்!
மீண்டும் ஆட்டோக்களை பழுது பார்த்து இயக்க ரூ.10,000/- வழங்கு! என்பன
உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் தோழர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர், உதவித்தலைவர் தோழர் சுந்தரராசு ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க மாவட்ட ஆட்சியரகம் நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை, காவல்துறையினர் மெயின் ரோட்டிலேயே மறித்து “4 பேர் மட்டும் செல்லுங்கள் மற்றவர்கள் ஓரமாக நில்லுங்கள் !” என தடுத்தார்கள்.
ஆட்சியரக வாயிலிலேயே கொளுத்தும் வெயிலில் பெண்கள், குழந்தைகளுடன் என அமர்ந்து போராட்டம் நடத்தவே… காவல்துறை உள்ளே செல்ல அனுதித்து, “10 தோழர்கள் மட்டும் ஆட்சியரிடம் பேச வாருங்கள்…” என அழைத்து சென்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
“அரசின் உத்தரவை பெற்று விரைவில் தீர்வு காண்பதாகவும், மாவட்ட நிதியிலிருந்து நிவாரணம் தர ஏற்பாடு செய்வதாகவும்,” மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
மக்கள் அதிகாரம், ம.க.இ.க., புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்விற்கு ஆதரவளித்தனர்.
இறுதியாக சங்கத் தோழர்களுக்கு செயலர் மணலிதாஸ் நன்றி கூறினார்.
தகவல் :
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம்
இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 97916 92512.