தமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் நூல் தொல்காப்பியம் (காணொளி உரை)

நண்பர்களே….

பொ.வேல்சாமி

மிழின் மிகப் பழமையான நூலான தொல்காப்பியத்தை நாம் அனைவரும் ஒரு இலக்கண நூலாகத்தான் கருதி வந்திருக்கிறோம். பாரம்பரியமான உரையாசிரியர்கள் பெரும்பாலும் இதேபோன்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை அவர்களுடைய உரைகள் வெளிப்படுத்துகின்றன.

தொல்காப்பியத்தை சுமார் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசித்து வரும் எனக்கு அந்நூல் எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் மட்டும் விவரித்துப் பேசவில்லை. பொருள் இலக்கணத்தின் ஒரு பகுதியாகத்தான் எழுத்தையும் சொல்லையும் தொல்காப்பியர் பேசுகிறார் என்று கருதுவதற்கு பல இடங்கள் தென்பட்டன. குறிப்பாக தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருளியல், மெய்ப்பாட்டியியல், உவமயியல் போன்ற மூன்று இயல்களும் பழந்தமிழ் படைப்பிலக்கியத்தின் தன்மைகளை விளக்கும் முகமாக எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் உலகிலுள்ள பிறமொழி இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

படிக்க:
♦ பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !
♦ இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி

குறிப்பாக பொருளியியல் என்ற இயலில் தொல்காப்பியர் ஒரு தமிழ்ப் படைப்பிலக்கியம் என்பது இலக்கியச் சுவையை மிகுதிப்படுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் அதீதமான கற்பனைகளைக் கையாளலாம் என்று கூறுகிறார். இத்தகைய செய்தியை அடிப்படையாக வைத்து கேரளப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைச் சார்பாக நடத்தப்பட்டு வரும் “இணையவழித் தேசிய பயிலரங்கத்தில்” நான் பேசிய காணொளி உரையின் இணைப்பை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.

இப்பதிவில் உள்ள செய்திகள் ஒரு விரிந்த நூலாக எழுதப்பட வேண்டியதின் சுருக்க வடிவம் மட்டுமே.

தொல்காப்பியம் பேசுகின்ற தமிழ்ப் படைப்பாக்கம் பற்றிய செய்திகள் உள்ள பொருளியியல் மெய்ப்பாட்டியியல் உவமயியல் ஆகிய 3 நூல்களின் உரைவளப் பதிப்புகளின் இணையதள இணைப்பை இணைத்துள்ளேன்.

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க