அனுப்புதல்
அமிர்தா
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

பெறுதல்
மாநகராட்சி ஆணையர்,
சென்னை மாநகராட்சி.

பொருள் : கொரோனா நோய் தொற்றிலிருந்து சென்னை மக்களை காக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தல்…..

ஐயா வணக்கம்,

கொரோனோ நோய்த்தொற்றில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனோ தொற்று நோயின் தீவிரம் மிக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது .

கடந்த சில நாட்களாக தொற்று நோயின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது என்பது மக்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அரசு அளித்துள்ள புள்ளிவிபரங்களின்படி ராயபுரம், கோடம்பாக்கம் ,திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

தற்பொழுது கொரோனா பாதிப்பு என்பது சம்பந்தப்பட்ட நபர் தானாகவே சென்று அல்லது வேறு நோய்களுக்கு மருத்துவமனைக்கு வரும் பொழுது பரிசோதனை செய்யும்போது தெரிய வரும் முடிவுகளாகவே இருக்கின்றன.

ஆகவே

  1. தற்பொழுது ஒருவருக்கு கொரோனோ தொற்று நோய் உறுதி செய்யப்பட்டால் அவரை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்ப்பது என்பது நடைமுறையில் உள்ள ஒன்றாகும். அவருடைய குடும்பத்தாருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்வதில்லை. இதனால் அப்பகுதியில் நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே ஒருவருக்கு கொரோனோ நோய் தொற்று ஏற்பட்ட உடனேயே அவருடைய குடும்பத்தாரையும் அக்கம்பக்கத்தினரையும் பரிசோதனை செய்ய வேண்டும்.அவர்களை சிறப்பு முகாம்களில் அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
  2. தற்பொழுது வீட்டிற்கு வரக்கூடிய சுகாதார பணியாளர்கள் பொதுவாக சளி, இருமல் போன்ற தொந்தரவு இருக்கிறதா என்று கேட்டு விட்டு செல்கிறார்கள். சமீபத்தில் முதல்வர் அறிவித்தபடியே சுமார் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் இந்த நோய் பரவி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஆறு மண்டலங்களிலும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  3. கொரோனோ நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  4. சென்னை மாநகரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொது முடக்கம் செய்து அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
  5. சென்னையில் உள்ள அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான ஆறு மண்டலங்களிலும் முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 7500 வழங்கப்படவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தேதி 15.6.2020
இடம் சென்னை

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க