கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தற்போது அமல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் அனைவரது மனதிலும் எழும் கேள்வி “பொருளாதாரம் என்ன நிலைமையில் உள்ளது” என்பதுதான். பலரும் பல்வேறு பதில்களை, அவர்களது சார்பு நிலைக்கேற்ப பதிலளித்து வருகின்றனர்.
இந்திய நிதியமைச்சர் ‘எல்லாம் கடவுள் செயல்’ என்று பதிலளிக்கிறார். ஆனால் நிலைமை என்னவோ எதிர்மறை (நெகட்டிவ்) வளர்ச்சியில் தான் சென்று கொண்டிருக்கிறது. இதனை பற்றியும், மேலும் இச்சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு EIA – 2020, புதிய கல்விக் கொள்கை என்ற மக்கள் விரோத திருத்தங்களைச் செய்வதை நியாயப் படுத்துகிறது பாஜக அரசு. இவற்றை தனக்கெ உரிய எளிமையான நடையில் விளக்குகிறார் பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன். இக்காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…
நன்றி : தமிழ் கேள்வி.