டலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மஞ்சக்குப்பம் கார் ஸ்டண்ட் அருகில் 09.09.2020 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்

  • நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்!
  • பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!
  • புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புமாஇமு உறுப்பினர் தோழர் பூங்குழலி தலைமை தாங்கினார். பொது நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் வெண்புறா குமார் துவக்கவுரையாற்றினார். புமாஇமு உறுப்பினர் தோழர் வெங்கடேசன் மற்றும் புமாஇமு மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இறுதியாக புமாஇமு தோழர் பால்ராஜ் நன்றியுரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தோழர் பூங்குழலி தனது தலைமயுரையில், “மருத்துவம் படிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் ஏற்கனவே இருக்கிறது இதில் வகுப்பு, தேர்வு என்ற அடிப்படையில் இல்லாமல் இறுதி ஆண்டு பயிற்சி எடுத்த பிறகு ஒருவர் மருத்துவர் ஆக முடியும் இவ்வாறு இருக்கையில் பள்ளி படிப்பை வைத்து ஒரு தகுதி தேர்வு என்பது மருத்துவரை எப்படி உருவாக்க முடியும்? இந்த தேர்வு என்பதே எழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வியை பறிக்கின்ற செயல் அனிதா முதல் கரீஷ்மா வரை பல்வேறு எழை மாணவர்களை படுகொலை செய்து வருகிறது. இப்படி பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை பறித்து காசு உள்ளவனுக்கு கல்வி என்று மனுதர்ம கொள்கையை கொண்டு வரும் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யவேண்டும். கொரோனா பெரும் தொற்று அதிகமாகும் காலத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த கூடாது” என்ற அடிப்படையில் தலைமை உரை பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் வெண்புறா குமார் பேசுகையில், “தமிழகத்தை அழிக்கின்ற வகையில் மோடி அரசு பல்வேறு திட்டங்களை அமுல் படுத்தி வருகின்றது. இதற்கு இங்கு இருக்கும் சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறது. புதிய கல்வி கொள்கையில் 3,5,8 பொது தேர்வு என்பது மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. நமது உரிமைகளை மீட்க சின்ன சின்ன போராட்டங்கள் என்பது தீர்வு ஆகாது. ஜல்லிக்கட்டு போன்ற போராட்டம் தான் தீர்வு! அது போன்ற போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும்.” என்று கண்டன உரையாற்றினார்.

படிக்க:
விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை
தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

அதற்கடுத்தபடியாக தோழர் வெங்கடேசன் பேசுகையில், “இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களையும், பல மொழி பேசும் மக்களையும் கொண்ட ஒரு நாடு. இங்கு ஒரே தேசியம் என்று சொல்வது அராஜக போக்கு. இப்படி இருக்கும் போது இதில் ஒரே கல்வி கொள்கை, ஒரே மொழி என்று சொல்வது ஒரு பாசிச போக்கு! இந்த கல்விக் கொள்கையில் அறிவியலின் பெயரில் புராண இதிகாச குப்பைகளும், அறிவியலுக்கு எதிரான கதைகளும் திணிக்கப்படுகிறது. இதை முறியடிக்க நாம் ஒன்றிணைத்து போராட வேண்டும்.” என்று பேசினார்.

தோழர் மணியரசன் தனது கண்டன உரையில், “கொரோனா பெரும் நோய் தொற்று இருக்கும் போது இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ கல்வியை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் கல்வியை பறிக்கும் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யவேண்டும்” என்ற அடிப்படையில் பேசினார்.

இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தோழர் பால்ராஜ் நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்துவைத்தார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு : 97888 08110.