ந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளை ஒட்டி, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு பெரியாரின் நினைவேந்தினர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், குலக் கல்வி முறை உள்ளிட்ட மனுதர்ம ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான அம்சங்களைக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை தடை செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை