திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு, பட்டாபிராமில் நவம்பர் 7 அன்று மாலை 6 மணியளவில் ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் திரளான தோழர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என சுமார் 250-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காண்ட்ராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா சிறப்புரையாற்றினார்.
தனது உரையில், முதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும் என்கிற முழக்கத்தை தற்போதைய பேரழிவுகளோடு பொருத்தி விவரித்தார்.
முதலாளித்துவம் சொர்க்கமல்ல; அது ஒரு நரகம் என்பதை கொரோனா பெருந்தொற்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருப்பதையும், முதலாளித்துவ பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட சோசலிசம்தான் ஒரே மாற்று – ஒரே தீர்வு என்பதையும் எடுத்துரைத்த தோழர் சிவா, சோசலிச இலட்சியத்தை நோக்கி நமது பாதையை வகுக்க அறைகூவல் விடுத்தார்!!
பாருங்கள் ! பகிருங்கள் !!