பொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்

நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை காக்க அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவது மிகவும் அவசியம்! நவம்பர் 26- பொது வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்போம் !

வம்பர் 26 பொது வேலைநிறுத்தத்தில் நமது உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் சி.ஸ்ரீகுமார் அறைகூவல் விடுத்திருக்கிறார். தனது உரையில் அவர் கூறியுள்ளதாவது :

“இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் நிறைவான சேவைகளை வழங்குவதில் பொதுத்துறை நிறுவனங்கள்தான் முன்னணியில் நிற்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் இராணுவத் தளவாடங்கள் மற்றும் உபரி பொருட்கள் தயாரிக்கும் பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள்  மொத்தம் 41 உள்ளன. தமிழகத்தில் மட்டும் இத்தொழிற்சாலைகள் மொத்தம் 6 உள்ளன.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆத்மநிர்பார் எனும் பெயரில், பாதுகாப்புத் துறையை தனியார்மயமாக்கும் சட்டத்தை அறிவித்தார் நிர்மலா சீத்தாராமன். அதனை எதிர்த்து பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சங்கங்கள் பல போராட்டங்களை நடத்தின.

பார்க்க :
♦ நவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம் || AIBEA
♦ இழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை !

பாதுகாப்புத்துறை மட்டுமல்ல, மிகப்பெரிய அரசு நிறுவனமான ரயில்வேதுறையை தனியார்மயமாக்கத் திட்டமிட்டிருகிறது மோடி அரசு. ரயில்வேதுறையின் கீழ் 8 தொழிற்சாலைகள் உள்ளன. அதையும் தனியார்மயமாக்க திட்டமிட்டிருக்கிறது மோடி அரசு. இந்திய தொலைத்தொடர்பு துறையின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அழிக்கும் தனியார்மய சட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. தற்போது 90ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கொடுத்து அனுப்பிவிட்டனர்.

பொதுத்துறை வங்கிகள் கார்ப்பரேட்டுக்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. மிகப்பெரும் நிதி நிறுவனமாக எல்.ஐ.சி-யில் நிதிகளை தனியார்க்கு தாரைவார்க்கப் பார்கிறது மோடி அரசு.

தொழிலாளர்கள் போராடிப்பெற்ற 40 தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் என்ற பெயரில் முற்றிலுமாக மாற்றிவிட்டார்கள். அந்த சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும் போது நிரந்தர வேலை, ஓய்வூதியம், 8மணி நேரவேலை, சங்கம் வைக்கும் உரிமை ஆகிய அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும்.

எனவே விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், என அனைவரும் நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை காக்க ஒன்றிணைந்து போராடுவது மிகவும் அவசியம்! எனவே நவம்பர் 26, 2020 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து உழைக்கும் மக்களும் பங்கேற்க வேண்டும்.”

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க