PP Letter head06.12.2020

பத்திரிகை செய்தி

டிசம்பர் 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம் !

வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடும் பனியில் ஒரு கோடி விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் பிரதமர் என்று கூறப்படும் நரேந்திர மோடியோ வாரணாசியில் ஆடல் பாடல்களை ரசித்துக் கொண்டிருக்கிறார். வயதானவர்கள் முதல் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அடிக்கல் நாட்ட தயாராகிக் கொண்டிருக்கிறார்.

பேச்சுவார்த்தையின்போது அரசு கொடுத்த உணவையோ தேநீரையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று  அறிவித்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேளாண் சட்டத்திருத்தங்கள் மூலம் கொஞ்சநஞ்சம் வாழ்ந்து கொண்டிருக்கிற விவசாயியின் வாழ்க்கையை மொத்தமாக அழிக்கப்படும். அரிசி, பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும்.

படிக்க :
♦ உங்கள் ரயில் பயணங்களைப் பதம்பார்க்கக் காத்திருக்கும் அம்பானிகள் !
♦ அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !

யார் செத்தால் நமக்கென்ன அதானி அம்பானியை உலக பணக்காரன் ஆக்கியே தீருவேன் என்று வெறியோடு அலையும்   மோடி, அமித்ஷா கார்ப்ரேட் –  காவி பாசிச கும்பலுக்கு முடிவுகட்ட வேண்டும் எனில் தில்லியில் விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தைப் போன்று  இந்தியா முழுமையும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அந்தவகையில் AIKSCC அறைகூவல் விடுத்துள்ள நாடு முழுவதுமான இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது சோறு தின்னும் அனைவரின் கடமை.

இந்த பொது வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் AIKSCC-யுடன் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் பங்கு பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,

தோழர்  வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க