“இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஒரு உரை” (குருசேவின் இரகசிய உரையை இப்படித்தான் பிரிட்டனின் “டெலிகிராப்” நாளிதழ் அன்று அழைத்தது) முழுக்க முழுக்க பொய்யும் புரட்டுமானதா?

குருசேவின் அந்த “புகழ்பெற்ற” உரைக்குப் பின்னர், “சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரே சொல்லிவிட்டார் பார்த்தீர்களா – ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி – கொடுங்கோலன் என்று நாங்கள் சொன்னபோதெல்லாம் மறுத்தீர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என்றெல்லாம்  இடதுசாரிகளை நிலைகுலையச் செய்து கொண்டிருந்தனர் முதலாளித்துவவாதிகளும், “நடுநிலைவாதிகளும்”.

ஸ்டாலின் மறைவிற்குப் பிறகு 1956-ம் ஆண்டு ஃபிப்ரவரி 25-ல் ஒரு இரகசிய உரையில் ஸ்டாலின் பற்றி குருசேவ் அடுக்கடுக்கான அவதூறுகளைக் கூறினார் குருசேவ். ஸ்டாலினுடைய வாழ்நாளிலேயே முதலாளித்துவ நாடுகள் பல்வேறு அவதூறுகளை பரப்புரை செய்தாலும், நடைமுறையில் அப்படியான அவதூறுகளுக்கு ஸ்டாலினும் அவர் தலைமையில் இரசிய மக்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இதனால் அடுத்தடுத்த காலங்களின் மக்கி மண்ணாகி இருக்க வேண்டிய முதலாளித்துவவாதிகளின் பொய்ப் பரப்புரைகளுக்கு, ஸ்டாலினுடன் இருந்த குருசேவின் பொய்கள் தாங்கி நிற்கும் ஆதாரமாய் மாறி நின்றன. இதனைப் பயன்படுத்தி தோழர் ஸ்டாலினை அவதூறு செய்வதன் மூலம், சோசலிச வெறுப்புணர்வையும் வளர்த்து பரப்புரையும் செய்தார்கள்.

குருச்சேவின் ”புகழ்பெற்ற உரை”யில் கிடந்த அனைத்துப் பொய்களுக்கும், சோவியத் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் இருந்தும், கடிதப் போக்குவரத்துகளில் இருந்தும் தரவுகள் எடுத்து அத்தனையையும் ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார் நூலாசிரியர் குரோவர் ஃபர். இந்நூலை தமிழில் செ.நடேசன் அவர்கள் சிறப்பாக தமிழாக்கம் செய்திருக்கிறார்.

படிக்க :
♦ ஐ.ஐ.டி.-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கும் மோடி அரசு !
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

இந்த நூலில் இருந்து, ”ஸ்டாலின் ட்ராட்ஸ்கியர்கள் குறித்து தவறான நிலைப்பாடு எடுத்ததாக” குருசேவ் சொல்லும் குற்றச்சாட்டை குரோவர் அம்பலப்படுத்தும் பகுதியை மட்டும் இங்கு வழங்குகிறோம்.

000

டிராட்ஸ்கியர்கள்

குருச்சேவ் :

நாம் டிராட்ஸ்கியர்களின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். மிக நீண்ட வரலாற்றுக் காலத்துக்குப் பின்பான இப்போது டிராட்ஸ்கீயர்களுடனான சண்டைப்பற்றி முழு அமைதியோடு உணர்ச்சிவசப்படாமல், போதுமான குறிக்கோளோடு இந்த விஷயத்தை பேசி ஆய்வு செய்யலாம்.  இவ்வளவு காலத்திற்குப் பிறகும் டிராஸ்கியைச் சுற்றியிருந்தவர்கள் எந்தவகையிலும் முதலாளித்துவ சார்ந்தவர்கள் என்பதற்கான அடையாளங்களைக் காண முடியவில்லை . அவர்களில் ஒருபகுதியினர் கட்சி சிந்தனையாளர்கள்; மற்றும் ஒரு குறிப்பிட்ட பகுதி தொழிலாளர்களிடமிருந்து பணியமர்த்தப்பட்டவர்கள். புரட்சிக்குப்பின் டிராட்ஸ்கியர்களோடு சேர்ந்த பல தனிநபர்களின் பெயர்களை கூறலாம். ஆனாலும், அதே தனிநபர்கள் புரட்சிக்கு முன்பும், அக்டோபர் சோசலிசப் புரட்சியின்போதும் இந்த மாபெரும் புரட்சியின் வெற்றியை ஒருங்கிணைத்தபோதும் அவர்கள் டிராட்ஸ்கியசத்திலிருந்து வெளியேறி லெனினிய நிலைகளுக்குத் திரும்பியவர்கள். தொழிலாளர் இயக்கங்களில் பாடுபட்டவர்கள். இத்தகையவர்களை நிர்மூலம் செய்தது தேவைதானா?

1937 பிப்ரவரி – மார்ச் மத்தியக்குழு பிளீனத்தில் டிராட்ஸ்கியர்களைப் பற்றி ஸ்டாலின் – மார்ச் 3

  1. “அந்நியப் புலனாய்வுத்துறைகளுக்காக, அவர்களின் பிரதிநிதிகளாக, திசைத்திருப்புபவர்களாக, அழிவுவேலைகளில் ஈபடுபவர்களாக, உளவாளிகளாகத் தீவிரமாகச் செயல்படும் டிராஸ்கியர்கள் ஏற்கனவே தொழிலாளி வர்க்கத்தின் அரசியல்களைப் பிரதிநிதித்துவபடுத்துபவர்கள் என்ற நிலையை இழந்துவிட்டார்கள். தொழிலாளிவர்க்க நலன்களுக்கான சிந்தனைகளை தருபவர்கள் என்ற நிலையையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். அவர்கள் அழிவுசக்திகளாக, இசைதிருப்புபவர்களாக, உளவாளிகளாக, கொலைகாரர்களாக எந்தவிதமான கொள்கையோ, சிந்தனையோ இன்றி அந்நிய உளவுத்துறை நிறுவனங்களுக்குப் பணியாற்றிவருகிறார்கள். இது நமது கட்சித் தோழர்களுக்கு கட்டாயம் விளக்கப்படவேண்டும்.”இப்போதைய டிராட்ஸ்கியர்களுக்கு எதிரான போராட்டங்களில் விவாதங்கள் என்ற பழைய முறைகளைப் பயன்படுத்தப் படக்கூடாது. அவர்களை அழித்தொழிக்கின்ற, வேருடன் பிடுங்கி எறியவேண்டிய புதியமுறைகளில் நடத்தப்படவேண்டும் என்பது கட்டாயம் விளக்கப்படவேண்டும்J.V.Stalin, Mastering Bolshevism. NY: Workers Library Publishers,1937, pp.26-7;
    cited from’ http://www.marx2mao/stalinMB37

மார்ச் 5-இல் பிளீனத்தின் நிறைவுரையில் ஸ்டாலின்:

“ஆனால், இங்கே ஒருகேள்வி எழுகிறது. ஜெர்மனிய, ஜப்பானிய ஏஜண்டுகளான டிராட்ஸ்கியர்களை அழித்தொழிக்கின்ற, வேருடன் பிடுங்கி எறிகின்ற நடைமுறைப் பணிகளை எவ்வாறு செயல்படுத்துவது? இதன்பொருள் உண்மையான டிராட்ஸ்கியர்களை மட்டுமல்லாமல், டிராட்ஸ்கியர்களை நோக்கி சிலநேரங்களில் ஊசலாடியவர்களையுமா? அதன்பின் நீண்டநாட்களுக்கு முன்பே டிராட்ஸ்கியத்திலிருந்து விலகி வந்தவர்களையுமா? முன்னொரு காலத்தில் நீண்டதெருக்களில் டிராட்ஸ்கிய ஏஜண்டுகளாக அழிவுவேலைகளில் ஈடுபட்டு, அதன்பின் டிராட்ஸ்கியர்களைவிட்டு நீங்கியவர்களையும் கூடவா? அத்தகைய குரல்கள் ஏதோ ஒருவிதத்தில் இந்தப் பிளீனத்தில் கேட்டன. அத்தகைய பொருள்விளக்கத்தை நாம் தீர்மானத்தில் பரிசீலிக்கவேண்டுமா? இல்லை. நாம் அதை சரியானது என்று கருதமுடியாது.

இந்தப் பிரச்சனையில், மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் போலவே, ஒரு தனிப்பட்ட, மாறுபட்டதான அணுகுமுறை இருந்தாக வேண்டும். நீங்கள் எல்லோரையும் ஒரே அளவுகோலில் அளந்து விடக் கூடாது. அத்தகைய துல்லியமற்ற பொதுப்படையான அணுகுமுறை உண்மையான டிராட்ஸ்கிய அழிவுசக்திகளுக்கும், உளவாளிகளுக்கும் எதிரான நமது போராட்டங்களுக்குத் தீங்குகளை மட்டுமே விளைவிக்கும்.

நமது பொறுப்பு மிக்க தோழர்களிடையே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்னாள் டிராட்ஸ்கியர்கள் உள்ளார்கள். அவர்கள் நீண்டகாலத்துக்கு முன்பே டிராட்ஸ்கியத்திலிருந்து விலகியதோடு, டிராட்ஸ்கியத்தை எதிர்த்து இப்போது போராடுகிறார்கள். டிராட்ஸ்கியத்தை நோக்கி ஒருபோதும் அலைபாயாத நமது மதிப்புக்குரிய சில தோழர்களைவிட சிறப்பாக அதைவிட நல்லமுறையில் போராடிவருகிறார்கள். இப்படியான தோழர்களை இப்போது இழிவாகப் பேசுவது முட்டாள்தனமானது.

நமது தோழர்கள் தத்துவார்த்தரீதியாக எப்போதும் டிராட்ஸ்கியத்தை எதிர்த்து வருபவர்களாக இருந்தாலும், தனிப்பட்ட டிராட்ஸ்கியர்களுடன் சொந்தத் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள். அப்போதும்கூட, தங்கள் கிராமங்களில் டிராட்ஸ்கியர்கள் இருப்பது தெரிய வந்தபோது அதை ஒழிக்க அவர்கள் தாமதித்ததில்லை. இருந்தாலும் டிராட்ஸ்கியர்களுடனான தனிப்பட்ட தங்களது நட்புறவுகளை அவர்கள் இன்னமும் துண்டித்துக் கொள்ளாமலிருப்பது நல்லதல்ல. ஆனால், இத்தகைய தோழர்களை – டிராட்ஸ்கியத்துடன் ஒட்டுமொத்தமாக சேர்ப்பது சிறு சிறுபிள்ளைத்தனமானது”

– Ibid, pp.43-4

1937 பிப்ரவரி – மார்ச் பிளீனத்தில் ஸ்டாலின் முன்வைத்ததை குருச்சேவ் தன் சொந்த வார்த்தைகளால் எப்படி வெளிபடுத்தினார் என்பதை மிகச்சரியாக நினைவு கூர்வோம்:

எல்லாவற்றுக்கும் அப்பால், டிராட்ஸ்கியைச் சுற்றியிருந்த மக்களின் பாரம்பரியம் எந்தவகையிலும் முதலாளித்துவ சமூகம் என்று எந்தவழியிலும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களில் ஒருப்பகுதியினர் கட்சியின் அறிவுத்துறை சார்ந்தவர்கள். குறிப்பிட்ட பகுதியினர் தொழிலாளர்களிடமிருந்து நியமிக்கப்பட்டவர்கள். நாம் பல தனிமனிதர்களை அவர்கள் காலத்தில் டிராட்ஸ்கியர்களுடன் சேர்ந்தவர்கள் என்று பெயர் குறிப்பிடலாம். ஆனால், அதே தனிமனிதர்கள் புரட்சிக்குமுன்பும், அக்டோபர் சோசலிசப் புரட்சியின்போதும், இந்த மாபெரும் புரட்சியின் வெற்றிகளை ஒருங்கிணைத்தபோதும் தொழிலாளர் இயக்கங்களில் தங்களை தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டவர்கள். அவர்களில் பலர் டிராட்ஸ்கியத்துடன் முறித்துக்கொண்டு லெனினிய நிலைக்குத் திரும்பினார்கள்’ (மேலே பார்க்க)

1930-களில், சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தில் டிராட்ஸ்கியர்கள் என்ற பிரச்சனை திரும்பவந்தது என்பதை இங்கு பரிசீலிப்பது வசதியாக இருக்கும் என்று ‘இரகசிய உரையின் ஒருபகுதியில் குருச்சேவ்:

1927-ல் 15-ஆவது கட்சிக் காங்கிரஸ் நிகழ்வில் வெறும் 4,000 வாக்குகள்தான் எதிர்த்தரப்பான டிராட்ஸ்கிய- ஜியானோவீவியர்களுக்குக் கிடைத்தது. அப்போது 7,24,000 பேர் கட்சி தரப்பு நிலைபாட்டில் இருந்தனர் என்பதை நாம் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும். 15-ஆவது கட்சி காங்கிரஸுக்கும், பிப்ரவரி – மார்ச் கட்சி பிளீனத்துக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளில் டிராட்ஸ்கியர்கள் முற்றிலும் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளனர். பல முன்னாள் டிராட்ஸ்கியர்கள் தங்கள் சிந்தனைகளை, தங்கள் முந்தைய பார்வைகளை மாற்றிக்கொண்டு பல்வேறு பிரிவுகளில் சோசலிச கட்டுமானத்துக்கு வேலை செய்தார்கள். சோசலிச வெற்றியின் சூழல் நிலவும் நாட்டில் தீவிர எதிர்ப்பாளர்களுக்கு பெரும்பான்மை கிடைக்க அடிப்படை இல்லை என்பது தெளிவாகிறது”

1937 பிப்ரவரி – மார்ச் மத்தியக் குழு பிளீனத்தில் ஸ்டாலின் :

1927-இல் நமது கட்சியில் டிராட்ஸ்கியர்கள் பற்றி நடைபெற்ற விவாதங்களை மனதில் நினைவுகூருங்கள். அந்த நேரத்தில் இருந்த 8,54,000 கட்சி உறுப்பினர்களில் 7,30,000 பேர் வாக்களித்தார்கள் . அவர்களில் 7,24,000 பேர் போல்ஷ்விக்குகளுக்கு ஆதரவாக , டிராட்ஸ்கியத்துக்கு எதிராக வாக்களித்தனர். 4,000 கட்சி உறுப்பினர்கள் அல்லது ஒரு சதவீதத்தில் பாதியினர் டிராட்ஸ்கியர்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அப்போது 2,600 கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதிலிருந்து விலகி நின்றனர். இந்த எண்ணிக்கையிலும் பலர் இப்போது டிராட்ஸ்கியத்தின்மீது அவநம்பிக்கை கொண்டு அதைவிட்டு விலகிவிட்டனர்: மேலும் டிராட்ஸ்கிய சக்திகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்ற கருத்துக்கு நீங்கள் வந்தீர்கள் என்பதையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

J.V. Stalin, Mattering Bolshevism. NY; Workers Library Publishers. 1937, pp. 59-60. At http://www.marx2mao.com/Stalin/MB37.html (Emphasis added in both cases-GF)

ஸ்டாலினுடைய இந்தப் பேச்சிலிருந்து குருச்சேவ் மிக நன்றாக நகலெடுத்திருக்கிறார்!

டிராட்ஸ்கியர்களின் குற்ற உணர்வு பற்றி சுலோப்டலோல்:

டிராட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் 1930-களில் வெளிநாடுகளில் அரசியலோடு இணைந்த நடவடிக்கைகளில் பிரச்சாரம் மட்டுமே செய்தார்கள் என்று சொல்லப்பட்டது. அனால் அது அவ்வாறு இல்லை. டிராட்ஸ்கியர்கள் வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டார்கள். ஜெர்மன் இராணுவ புலனாய்வுத்துறையான (The Abwehr)’அப்வெஹ்ர்’ உடன் தொடர்புகொண்டிருந்த நபர்களைப் பயன்படுத்தி அவர்கள் 1937-ல் பார்சிலோனா குடியரசுக்கு எதிரான வன்முறை கிளர்ச்சிகளை உருவாக்கினார்கள். பிரான்சு, ஜெர்மனி சிறப்புப் புலனாய்வு சேவையில் இருந்த டிராட்ஸ்கிய வட்டங்கள், அந்த நாடுகளில் உள்ள சோவியத் யூனியனை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் காட்டிக்கொடுக்கும் செய்திகள் வந்தன. 1937-ல் பார்சிலோனா வன்முறைக் கிளர்ச்சியில் டிராட்ஸ்கியத் தலைவர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் நமக்கு ஸ்சுல்ஸே – பாய்ஸன் மூலம் தெரிவிக்கப்பட்டது …. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தகவலை நமக்கு தந்தார் என அவர் மீது கெஸ்டாபோ குற்றம் சாட்டினார். இது ஹிட்லரின் நீதிமன்றத்தில் அவருக்கு மரண தண்டனையைப் பெற்றுத்தந்தது.

மற்ற எடுத்துக்காட்டுக்கள்:

1941-இல் பாரிஸில் தமது வசிப்பிடங்களில் மறைந்திருந்த நமது பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை டிராட்ஸ்கியர்கள் தங்கள் அப்வெஹ்ர்’ உறவுகளைப் பயன்படுத்தி தேடினார்கள். இதை வஸிலெவ்ஸ்கி நமக்கு தெரிவித்தார். அவர் 1940 இல் கோமிண்டர்னின் செயற்குழுவில் கலந்து கொள்ளும் உரிமை கொண்ட பதவியில் நியமிக்கப்பட்டவர்.

English translation from Gen. Sudplatov, The Intelligence Service and the Kremlin, Moscow 1996.p 58:

சுடப்லடோவ் கருத்தை சரிபார்க்கும் நாஜி இராணுவ நீதிமன்றத்தின் சம்பந்தப்பட்ட பத்தி : ஆங்கில மொழியாக்கம்:

குற்றம்சாட்டப்பட்டவர் 1938-களின் துவக்கத்தில் ஸ்பானிஷ்  உள்நாட்டுப் போரின் போது, பார்ஸிலோனாவின் எல்லையில் அலுவலகப்பொறுப்பில் இருந்தார். அவர் சிவப்பு அரசுக்கு எதிரான உள்ளூர் கலகக்காரர் என்பதை உணர்ந்து ஜெர்மனியின் இரகசிய சேவையில்  ஒத்துழைக்க தயாரானர். இந்தச் செய்தி போலினிட்ஸ் தகவலுடன் அவரால் பாரிஸிலுள்ள சோவியத் தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.

(இந்த போலினிட்ஸ் என்பவர் ஜி செல்லாவான் போலினிட்ஸ். அண்மையில் ‘சிவப்பு இசைக்குழுவில் -Rote wanelle- நாஜிகளுக்கு எதிரான சோவியத் உளவுவேலையில் நியமிக்கப்பட்டவர். அவர் யுனைடெட் பிரஸ்ஸுக்காக வேலை செய்தார். அவர் இந்த அறிக்கையை சோவியத் தூதரக அஞ்சல் பையில் திணித்தார்” Shareen Blair Brysac, Resistung Hitler. Mildred Harnack and the Red Orchestra. Oxford University Press, 2000,p.237)

 

நூல் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்
ஆசிரியர் : குரோவர் ஃபர்
தமிழாக்கம் : செ.நடேசன்
வெளியீடு : பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்.
விலை : ரூ.500
தொடர்பு : 94866 41586

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க