பாஜக என்றாலே குற்றக் கும்பல் என்று பொருள்படும் வகையில்தான் அந்தக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுமே இருக்கின்றன. நிதி மோசடி தொடங்கி, பாலியல் வன்முறை வரை அனைத்து விதமான குற்றங்களையும் செய்தவர்கள்தான் அந்தக் கட்சியில் குடி கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக அமைச்சர்கள் 6 பேர் தங்கள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்படுவதற்குத் தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் அவலமும் நடந்திருக்கிறது.

கர்நாடக பாஜக-விற்கென்றே ஒரு தனி பாரம்பரியம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கர்நாடக சட்டமன்றத்திலேயே அமர்ந்து கொண்டு தனது மொபைலில் ஆபாச வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தது அம்பலமானது.

அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தற்போதைய முதல்வரான எடியூரப்பா தொடர்பான பாலியல் புகார்கள் சந்தி சிரிக்கத் துவங்கின. கடந்த 2020-ம் ஆண்டில் காவிரி நீர் திறப்பு விழாவில் நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவுடன் எடியூரப்பா நடந்து கொண்டது முதல், சமீபத்தில் எடியூரப்பா வீட்டிலேயே எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை கைவசம் வைத்து சிலர் மிரட்டுவதால்தான், எடியூரப்பா சம்பந்தம் இல்லாத நபர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்திருப்பதாக அவரது கட்சியின் பிரமுகர்களே கூறியிருப்பது வரை அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில், கர்நாடகா பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் முலாலி என்பவர், பாஜக அமைச்சர்கள் உள்ளிட்ட 19 பேரின் ஆபாச வீடியோக்கள் தன்னிடம் உள்ளதாகவும், அதை விரைவில் வெளியிடப் போவதாகவும் அறிவித்தார். அந்த வீடியோக்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு போலீசு கோரியது. இதைக் கேள்விபட்டு பயந்து அலறிப்போன பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் 6 பேர், தாங்கள் தொடர்புடைய வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடக் கூடாது என பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தடையுத்தரவும் பெற்றனர்.

பாஜக ஒரு கிரிமினல் பாலியல் குற்றக் கும்பல் என்பதற்கு இது ஒரு வகை மாதிரி. இந்தக் கிரிமினல் கும்பல்தான், தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை இழிபுகழ் அதிமுக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தே தீருவோம் என்று கூவுகிறது.

பாஜக ஒரு கட்சியே அல்ல, அது குற்றக் கும்பலின் கூடாரம். பாலியல் ஒழுக்கக்கேடு மற்றும் கொலைகார கிரிமினல்களைக் கொண்டே கட்சியைக் கட்டியமைத்து, கலவரம் செய்து பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கும் பாஜகவை இந்தியாவிலிருந்தே துடைத்தெறிவதுதான் காலத்தின் அவசியமாக இருக்கிறது !

கருத்துப்படம் :

கருத்துப்படம் : மு.துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க