“நான் இந்துத்துவாவை ஒருபோதும் நம்பவில்லை. மாணவர்கள் விரைவில் ஏபிவிபி-யை விட்டு வெளியேறுவார்கள்” என்கிறார் சமீபத்தில் ஏபிவிபி-யில் இருந்து வெளியேறிய முன்னாள் ஏபிவிபி தலைவர் ராம் நிவாஸ்.
டெல்லி பல்கலைக் கழகத்தை சேர்ந்த ராம் நிவாஸ் பிஷ்னோய், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) உறுப்பினர் ஆவார். இவர் சமீபத்தில் அந்த மாணவர் அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.
டெல்லி பல்கலைக் கழகத்தில் செயல்படும் காங்கிரசின் மாணவர் அமைப்பான National Students Union of India – NSUI நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பிஷ்னோய், ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவையும், அதன் செயல்பாடுகளையும் வெளிப்படையாக விமர்சித்தார். “நான் ஒருபோதும் இந்துத்துவாவை நம்பவில்லை. நான் மக்களுக்கு சேவை செய்யவே விரும்பினேன்” என்றார்.
படிக்க :
♦ ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !
♦ பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள ஓர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் பிஷ்னோய். அவர் குடும்பத்திற்கு எந்தவித அரசியல் பின்னணியும் கிடையாது. ஆனால், அவருக்கு அரசியலில் விருப்பம், அதை அவரது குடும்பமும் ஒருபோதும் எதிர்த்தது இல்லை.
