“யாரையும் சும்மா விடக்கூடாது
ரித்தாவோட தாத்தா
எலிசா சாருவோட அப்பா
இந்த சார் தே*டியா பு*ட
யாரையும் சும்மா விடக்கூடாது.”
– கோவை சின்மயா பள்ளி மாணவி மரணத்திற்கு முன் எழுதிய கடிதத்தில் மேற்கண்ட ஐந்தே வரிகள்தான் இருக்கின்றன. அந்த ஐந்து வரிகளில் அந்த மாணவியின் உள்ளத்தில் பொதிந்திருந்த ஆறாத ரணங்களும் ஆத்திரமும் வெளிப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் இந்தச் சமூகத்தின் இழிநிலையை தோலுறித்துத் தொங்கவிட்டிருக்கிறது.
கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியனாக பணியாற்றிய மிதுன் சக்கரவர்த்தி எனும் கிரிமினல் தன்னிடம் கல்வி கற்றுவந்த 12-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறான். அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து, மிதுன் சக்கரவர்த்தி மீது அவனது மனைவியிடமும் தலைமை ஆசிரியையிடமும் அந்த மாணவியும் அவரது நண்பனும் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சின்மயா பள்ளியின் தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன், பாதிக்கப்பட்ட மாணவியை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சிலிங் கொடுத்துவிட்டு, வீட்டில் இது பற்றி சொல்ல வேண்டாம் எனவும், பேருந்தில் யாரேனும் இடித்தால் அமைதியாக வந்துவிடுவது போல இதனையும் கடந்து போகும்படியும் “வழிகாட்டுதல்” கொடுத்துள்ளார்.

பெண்களை சாதியும் மதமும் அடிமையாக, நுகர் பொருளாக பார்க்கிறது.
பெண்களுக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள கட்டமைப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தே வேண்டும்.
ஆண்கள் மிருக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெண்களுக்கு மிகுந்த எச்சரிக்கை, கண்காணிப்பு தேவை.
வருத்தமாக உள்ளது உங்கள் கருத்துகள் மார்க்சியமில்லாமை
போராட்ட களமானது நேரடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் போலிசின் அரஜமாக உள்ளது.
சமூகத்தை யார் கட்டிக் காக்கின்றனர் ஒரு சிலரா? அல்லது இந்த அரசு இயந்திரமா?
புரியவில்லை புரட்சியாளர்களே உங்களின் பஞ்சர் டைலாக்.
இந்த சமூக அமைப்பே எல்லா ஒடுக்கப் பட்ட மக்களுக்கும் எதிரானது, அதாவது பெண்கள் ஒடுகப் பட்ட மக்கள் என்னும் இந்த தொடர் அட்டூழியங்கள் சாதியால் அல்ல அதிகாரம் படைத்தோரின் அரஜகமே. அதில் நீங்கள் சுருக்கி பேசும் பார்ப்பனியமானது உண்மையில் ஒடுக்கும் கூட்டத்தில் உள்ள கருப்பு ஆடுகளை காப்பாற்றும் உத்தியே வேறோன்றும் இல்லை.
இது போன்ற குற்றங்களை ஒழித்துக் கட்ட இச் சமூக அமைப்பில் சாத்தியமே இல்லை புரட்சியாளர்களே இதை தூக்கி எறிய அறை கூவல் விடுங்கள் அதை விடுத்து அவாளை மற்றும் குற்றம் சொல்லி உங்கள் தார்மீக கடமையிலிருந்து விலகி ஓடாதீர் புரட்சியாளர்களே!!!!
வணக்கம் சிபி,
அந்த மாணவியின் தற்கொலைக்குக் காரணமான சின்மயா பள்ளியின் நிர்வாகத்தை கைது செய்யாத அரசும் அதிகாரவர்க்கமும் மக்கள் போராட்டங்களுக்குப் பின்னர் தான் கைது செய்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
ஆளும் இந்த அரசுக் கட்டமைப்புதான் இத்தகைய சமூக இழிவுகள் அமைவதற்குக் காரணம் என்பதிலும், இந்த அரசுக் கட்டமைப்பை தகர்க்காமல் இதிலிருந்து பூரண விடுதலை இல்லை என்பதிலும் வினவுக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இப்பிரச்சினையில் அம்மாணவியின் தற்கொலை முடிவுக்குக் காரணமான சமூகத்தின் பொது மனநிலையையும் அதன் பின்னர் பொதிந்துள்ள பார்ப்பனிய ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பும் அம்பலப்படுத்தப்பட்டு தகர்க்கப்பட வேண்டியவையே !
இன்றைய காவி – கார்ப்பரேட் பாசிச சூழலில், மக்களின் மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பார்ப்பனியச் சமூக கட்டமைப்பைத் தான் பாசிஸ்ட்டுகள் தங்களது அடித்தளமாக எடுத்துச் செயல்பட்டுவருகின்றனர். பாசிச கும்பலின் இந்துராஷ்டிர ஆட்சி அபாயம் தடுக்கப்பட வேண்டுமானால், சமூகத்தில் உள்ள இந்த பிற்போக்கு மனநிலை தகர்க்கபப்ட வேண்டும்.
அந்த அடிப்படையில்தான் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. மற்றபடி ஒரு சில பார்ப்பனர்கள் தான் எதிரிகள் என்ற கருத்து வினவுக்கு கிடையாது. அப்படி ஒரு தொனி இந்தக்கட்டுரையில் வெளிப்படவில்லை என்றே கருதுகிறோம்.
பின்னூட்டத்திற்கும் கருத்து விவாதங்களை துவங்கியமைக்கும் நன்றி !
நன்றி முதற்கண் என்னுடைய கேள்விக்கு செவி மடுத்தமைக்கு தோழமையே, மீராவின் பெயரை சுருக்கி உள்ளது போலவே தங்களின் அதே பெரியார் பாணிய “அவாள்” மீதான காழ்ப்பு ஆளும் வர்க்கத்தின் மீது இல்லை நீண்ட கருத்து போராட்டம் உங்களுடன் செய்ய வேண்டும் பின் வருகிறேன் உங்கள் கருத்தறிந்து தோழமையே!!!
நல்லதொரு கட்டுரை. பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமிப்பது இம்மாதிரியான பாலியல் சீண்டல்களை குறைக்கும் என்று நம்புகிறேன்.
பி.கு: அது என்ன மீரா சாக்சன் என்ற பெயரைச் சுருக்கி மீரா என்றே எழுதியுள்ளீர்கள்?
தங்கள் கருத்துக்கு நன்றி பெஞ்சமின்! தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. சரி செய்து விடுகிறோம்.
கட்டுரை அருமை.
பெண்ணடிமைத்தனத்தையும் ஆணாதிக்கச் சிந்தனையையும் துடைத்தெறிய வேண்டுமானால், இந்தியச் சமூகத்தைப் பிண்ணிப் பிணைந்திருக்கும் பார்ப்பனிய இந்துமதத்தை வேரோடு கெல்லியெறிந்தே ஆகவேண்டும். அப்போதுதான், இத்தகைய சமூக அவலங்களைத் துடைத்தொழிக்க முடியும்.