
ஆர்.எஸ்.எஸ்-க்கு தரகு வேலை செய்யும் ராமதாஸ் கும்பல் !
வன்னியர் சங்கம் தொடங்கப்படவில்லை என்றால் வன்னியர்கள் பலரும் நக்சலைட் ஆகி இருப்பார்கள் ", என்று கூறியிருக்கிறார் காடுவெட்டி குரு. வர்க்கரீதியான மக்களின் சேர்க்கையை பிரிக்கவே பாமக ஊக்குவிக்கப்பட்டது
Good article..!
முதலில் வன்னியர்கள் யாராவது இதற்குப் பதில்ச் சொல்லுங்கள்.
வன்னியர்கள் தங்களை
“” ஷத்திரியர்கள்”” என அழைத்துக்கொள்கிறார்கள்.
இந்த ஷத்திரியர் என்ற வகைப்பாடு மனுநீதியின் அடிப்படையில் வருவது.
அப்படியானால் வன்னியர்கள் இந்து மதத்தின் பிறப்பின் அடிபலபடையிலான மனிதர்களைப் பிரிக்கும் பிரிவினையை ஏற்கிறார்களா? அதாவது வருணாசிரமத் தத்துவங்களை ஏற்கிறார்களா? இதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் இதற்குப் பதில்ச் சொல்ல வேண்டும். மேலும் மனுநீதியின்படி வன்னியர்கள் ஷத்திரியர்கள் என்றால் , மற்ற இனங்களான முதலியார்கள் , வெள்ளாளர்கள் , கவுண்டர்கள் , இவர்களெல்லாம் மனுநீதியின்படி என்ன வகைப்பாட்டில் வருகிறார்கள்.?
பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னங்களாக கார்ல்மார்க்ஸ் படத்தையும் , பெரியாரின் படத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
மனுநீதியின்படியான வகைப்பாட்டை தங்களுக்குச் சூட்டிக்கொண்டு பெருமை கொள்பவர்களுக்கு , கார்ல்மார்க்கஸ் படத்தையும் , பெரியாரின் படத்தையும் பயன் படுத்தத் தகுதி உள்ளதா?
பதில்ச் சொல்லுங்கள்.