ஸ்லாமிய மதவெறியர்களால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா தியவதனா (40).
கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையைப் சேர்ந்த பிரியாந்தா குமாரா பாகிஸ்தானில், தான் வேலைப்பார்க்கும் தொழிற்சாலையின் சுவற்றின் மீது ஒட்டப்பட்ட சுவரொட்டியை கிழித்ததாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இந்த வதந்தியை காரணமாக வைத்து பாகிஸ்தானில் உள்ள மத தீவிரவாத கட்சியான ‘தெஹ்ரிக்-இ-லப்பைக் பாகிஸ்தான்’ Tehreek-e-Labbaik Pakistan (TLP) என்ற கட்சியை சேர்ந்தவர்கள், குமாரா-வை கொடூரமாக தாக்கி எலும்புகளை முறித்து, எரித்துக் கொன்றுள்ளனர். அவரது உடல் 99 சதவிதம் தீக்கிரையாகிவிட்டது. பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் கொடூரத்தை வெளிபடுத்துகிறது. அவரின் எஞ்சிய உடல் பாகங்கள் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக இதுவரை 113 பேர் கைது மற்றும் 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த கொலைபாதக செயல் நமக்கு உ.பி – குஜராத்தில் நடக்கும் கும்பல் படுகொலைகளை நினைவூட்டவில்லையா? எந்த நாடாக இருந்தாலும் மத தீவிரவத கும்பல்களிடம் மனிதநேயம் இருப்பது சாத்தியமில்லை.
கருத்துப்படம் : வேலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க