புத்தளம் குப்பைத் திட்டத்துக்கு எதிராக மார்ச் -19 நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு.
தோழர்களே,
புத்தளத்தை குப்பைக் கிடங்காக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆபத்துக்களை நன்குணர்ந்த மக்கள் பல மாதங்களாக அத்திட்டத்தை நிறுத்தக்கோரி அங்கே போராடி வருகிறார்கள். சீமெந்து தொழிற்சாலை, நுரைச்சோலை அனல் மின் நிலையம் என தொடர்ச்சியாக புத்தளம் மக்களுடைய சுற்றுச் சூழலும் ஆரோக்கியமும் அரசின் திட்டங்களால் சிதைக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது குப்பை கொட்டும் திட்டமும் அவர்கள் மீது அடாத்தாக திணிக்கப்படுகிறது.
புத்தளத்துக்குள்ளேயே போராடிக்கொண்டிருந்த மக்கள் எதிர்வரும் 19-ம் திகதி காலை 9:00 மணிக்கு கொழும்பில் காலிமுகத்திடலில் போராட்டமொன்றினை ஒழுங்கு செய்துள்ளார்கள்.
சமூக நீதிக்கான வெகுசன இயக்கம் இப்போராட்டத்தினை ஆதரித்து கலந்துகொள்கிறது.
இப் போராட்டத்துக்கு இடதுசாரி முற்போக்கு சனநாயக அமைப்புகளும் மக்கள் அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும்.
தங்களையும் தங்கள் அமைப்பு சார்ந்த தோழர்களையும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு போராடும் மக்களுக்கு தோள்கொடுக்க வருமாறு தோழமையுடன் அழைக்கிறோம்.
சுத்தமான இலங்கைக்காக புத்தளம் மக்களுக்கு தோள் கொடுப்போம்!
தோழமையுடன்,
மு. மயூரன்,
சமூக நீதிக்கான வெகுசன இயக்கம்
தொடர்புகளுக்கு
மயூரன் 0772307807
லக்மாலி 077602125
முகநூலில்: Muralitharan Mayuran Mauran
இலங்கை எனும் குட்டித்தீவின் இயற்கை வளங்களையும் எதிர்கால சந்ததியையும் நேசிக்கும் தேசபக்தர்களே…
உண்மையில் உழைக்கும் எளிய மக்கள் தான் தேசபக்தர்கள்; அவர்களை தான் இயற்கை வளங்களை சூறையாடுவதில்லை; மிதமிஞ்சி நுகர்வதில்லை; அந்நிய சக்திகளுக்கு விலை பேசி விற்பதில்லை;
இவற்றையெல்லாம் செய்யும் நாசகார சக்திகளை எதிர்த்து அவர்கள் தான் போராடுகிறார்கள்.
அவ்வாறான தேசப்பற்று கொண்ட புத்தளம் மக்கள் கொழும்பு நோக்கி வருகிறார்கள். இதோ அவர்களின் அழைப்பு!!
சில உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதால், குப்பை பிரச்சனை ஓர் இனத்தின் பிரச்சினையாய் காட்ட முயற்சிக்கப்படுவதால்,
கொழும்பு Vs புத்தளம் என்ற மாகாண இடைவெளி வெட்டி சிலர் தன் வாக்கு வயிறுகளை நிரப்பிக்கொள்ளத் துடிப்பதால்…
இந்த அவசர அழைப்பு…
தோழர்களே… இந்த தாய் நாட்டை நேசிப்பவர்களே…
இது புத்தளப் பிரச்சினை அல்ல.. தேசியப் பிரச்சினை..! இந்த 200 நாளைத் தொடும் போராட்டம் இலங்கையின் ஒவ்வொரு உடன்பிறப்பினதும் உயிரோடு சம்பந்தப் பட்ட பிரச்சினை…!!
உண்மையில் உழைக்கும் எளிய மக்கள் தான் தேசபக்தர்கள்; அவர்களை தான் இயற்கை வளங்களை சூறையாடுவதில்லை; மிதமிஞ்சி நுகர்வதில்லை; அந்நிய சக்திகளுக்கு விலை பேசி விற்பதில்லை;
இவற்றையெல்லாம் செய்யும் நாசகார சக்திகளை எதிர்த்து அவர்கள் தான் போராடுகிறார்கள்.
இந்தத் திட்டம் இவர்கள் சொல்வதுபோல், அருவக்காலு என்ற இடத்தில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா..?
அருவக்காலு என்ற இடத்தில் செய்ய முட்பட்டபோது, “காட்டு வன விலங்குகளுக்கு” ஆபத்தானது என நிராகரிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா..?
அக்காட்டு விலங்குகளைவிட மிக அண்மையில் மனிதர்கள் வாழும் “சேரக்குழி” என்னும் மனிதக் குடியிருப்பில் தான் இது இப்போது அரங்கேறுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா..?
அதிர்வில் வெடிக்கும் வீடுகளோடும்… பதறிக் கண்விழிக்கும் சிறார்களோடும்… அக்கிராமம் போலீசில் போட்டிருக்கின்ற புகார்கள் உங்களுக்குத் தெரியுமா..?
இத்திட்டத்திற்கு பணம் கொடுத்த உலக வாங்கி அதனை கோபத்துடன் திருப்பி வாங்கிக்கொண்ட கதை..!
எந்த முன் அனுபவமும் அற்ற, ஒரு Black listed கம்பெனி (China Harbour Eng.co) இதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்ற கதை..!
குப்பையை எடுத்துவர மட்டும் வருடாந்தரம், 1,572 மில்லியன் (2012 கணிப்பு) தொடர்ந்து செலவாகப்போகும் கதை..!
இதற்கான ரயில் பாதைக்கு மாத்திரம் 52,060 மில்லியன் ரூபாய் கரையப் போகும் கதை…!!
தூரம் அதிகம் என்பதால், இடையில் அமையப்போகும் களனி – கரவெலபிடி Transition Center க்கு எத்தனை பில்லியன் என இன்னும் சொல்லப்படாத கதை..!!
இவை அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான்…!! தூரம்..!!
பிணத்தை அங்கேயே அடக்கம் செய்யாமல் 170 Km தாண்டி மையவாடி அமைக்கும் கொடூரம்..!!
இத்திட்டத்தின் பின்னால், தேச நலனுமில்லை, தேசிக்கயுமில்லை..!! பணம்..!! ,
Project என்பது, இப்போது பணம் சுருட்டும் விஷேட வடிவம்…!!
பதவியும், ஒரு Black listed கம்பெனியும் கிடைத்துவிட்டால்… அனைத்தும் அங்கீகாரத்துடன் நடக்கும்..!!
பாவம், இந்தப் பணப்பசிக்கு பலிக்கடாவாகப்போகும் இலங்கையின் பரிதாப நிலம் தான் “புத்தளம் – சேரக்குழி”
கடலிலிருந்து 175 m ,
கல்பிட்டியிலிருந்து 4 km,
வில்பத்துவிலிருந்து 5.67 km,
காலா ஓயா ஆற்றிலிருந்து 5 km,
காரைதீவிலிருந்து 400m
சேரக்குளிய வீடுகளிலிருந்து வெறும் 250 மீட்டர்..!!
இவற்றுக்கு மத்தியில்தான், இந்த அணுகுண்டு புதைக்கப்படுகிறது…!!
இலங்கை வாழ் நல்லுள்ளங்களே, வந்து பாருங்கள்…!
நிலக்கீழ் நீரும், இயற்கை காடுகளும், உயிரோடு மனிதர்களும், உலகே மறுக்கின்ற (land fill அமைக்க) சுண்ணக்கல் நிலமும் உள்ள இடத்தில் தான் இத்திட்டத்தை திணிக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்..!!
படிக்க:
♦ பொள்ளாச்சி குற்றவாளிகளை முச்சந்தியில் நிறுத்துங்கள்… தமிழகமெங்கும் போராட்டங்கள் !
♦ பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி
இவைகள் வெளிச்சத்துக்கு வராது…!
கொழும்பிலே உச்சரிக்கப்படாது…! Media conference இல் பேசப்படாது…!!
உண்மைகளை மறைக்க உறக்கக் கத்துகிறார்கள்..!!
“மீதொட்ட முல்ல” மீதேன் வெடிப்புக்கும் – 31 உயிரிழப்புக்கும் அவர்களே காரணமாக இருப்பதும்..!!
“அதற்கு ஏன் ஹர்த்தால் நடத்தவில்லை” என அடுத்தவனைக் கேற்பதும்..!!
வருடங்கள் தாண்டி வழியப்போகும் “லீச்செட்” டை, சில வாரங்களில் வருகிறதா என வந்து பார்க்கச் சொல்வதும்..!!
இல்லாத பொய் இணைத்து animation காட்டுவதும்…! கடைசி ஆயுதமாய் இனவாதத்தை இயக்க முயற்சிப்பதும்…!!
இந்த மண்ணை நேசிக்காத மடையர்களிடம் மட்டுமே எடுபடும்..!!
தரம் கெட்ட தலைவர்களின் இருப்புக்காய்…! மக்கள் நரகத்தை சுவைக்க முடியாது…!!
இந்த நிஜங்களைச் சொல்ல கொழும்பு வருகிறோம்…!
இந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு ஆத்மாவினதும் ஆதரவை எதிர்பார்த்து வருகிறோம்..!
இனம், மதம், மொழி கடந்து சந்ததி காக்கும் ஓர் சரித்திரப்போரை சத்தமாகச் சொல்ல வருகிறோம்…!!
கொழும்பில் எம்மோடு நீங்களும் கரம் சேருங்கள்..!
எங்கோ ஒரு மூலையில் இருந்து எமக்காக பிரார்தித்தவர்கள்கூட 19-ம் திகதி பக்கத்தில் வந்து நில்லுங்கள்..!
புத்தளம், அரசியலால் அநாதை ஆனாலும்.. எமக்கு சகோதரர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை நிரூபியுங்கள்..!!
செவ்வாய் கிழமை 19.03.2019 காலை 9.30 மணியளவில் காலி முகத்திடலில் உங்களை எதிரபார்த்தவர்களாய்…
காலில் குத்திய முள்ளுக்கு கண்களும் அழும் என்ற எதிர்பார்ப்போடு,
புத்தளம் மக்கள்…
முகநூலில்: Mohana Dharshiny