த்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் வணிகப் பரிவர்த்தனை செய்யவோ அல்லது அவர்களுக்கு தங்கள் நிலத்தை விற்கவோ கூடாது என உறுதிமொழி எடுப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அந்த வீடியோ ஜனவரி 2-ம் தேதி குந்திகாலா கிராமத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வீடியோவில், “இன்று முதல் இந்துக்களாகிய நாங்கள் முஸ்லீம் கடைக்காரர்களிடம் எந்தப் பொருட்களையும் வாங்க மாட்டோம் என்றும் அவர்களுக்கு எதையும் விற்க மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறோம். முஸ்லீம்களுக்கு எமது நிலங்களை விற்கவோ அல்லது குத்தகைக்கு வழங்கவோ மாட்டோம் என உறுதியளிக்கிறோம். இந்துக்களாகிய நாங்கள் எங்கள் கிராமங்களுக்கு வரும் விற்பனையாளர்களிடம் அவர்களின் மதத்தை உறுதிப்படுத்திய பின்னரே வாங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். அவர்களுக்கான பணியாளர்களாக நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று உறுயளிக்கிறோம்” என உள்ளூர் பழங்குடி மக்கள் உறுதிமொழி எடுக்க தூண்டப்பட்டுள்ளனர்.
படிக்க :
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
இந்த வீடியோவின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் ஆகிய இந்துத்துவ அமைப்புகளின் மிகப்பெரிய தூண்டுதல் இருக்கிறது என்பது போலீசின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஆரா கிராமத்தின் இளைஞர்கள் புத்தாண்டைக் கொண்டாட (சுற்றுலாவிற்காக) சர்குஜா மாவட்டத்தில் உள்ள குந்திகாலா கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கும் உள்ளூர் இளைஞர்களுக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது அடிதடி சண்டையாக மாறியுள்ளது.
அடுத்த நாள் குந்திகாலாவில் வசிக்கும் ஒருவர் ஆரா கிராமத்தைச் சேர்ந்த (குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த) ஆறு பேருடன் சேர்ந்து பிரேந்திர யாதவ் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து அவரையும், அவரது மருமகளையும் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரின் அடிப்படையில் ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு அன்றே உள்ளூர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2000-க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய கிராமம்தான் குந்திகாலா. இங்கு கிட்டத்தட்ட 80 சதவிதம் பேர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 3 சதவிதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் அனைவரும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள்.
தற்போது நடந்த இந்த மோதலை பயன்படுத்திக் கொண்டு சிறுபான்மை முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும், முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறி உறுதிமொழியை எடுக்கவும் குந்திகாலா கிராம பழங்குடி மக்களை தூண்டியுள்ளனர் காவி குண்டர்கள்.
இந்த தூண்டுதல் திடீரென்று நடந்தது இல்லை என உள்ளூர் கிராம வாசிகள் கூறுகின்றனர். “பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் போன்ற இந்துமதவெறி அமைப்புகள் இப்பகுதியில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியின் பழங்குடி சமூகம் இந்துக்கள் என்றும், முஸ்லீம்களை வெறுப்பது அவர்களின் தர்மம் என்றும் இவர்கள் கிராம மக்களிடையே தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கலவரங்களை தூண்ட முயற்சித்து வருகின்றனர்” என்று உள்ளூர்வாசி சவுகான் கூறினார்.
முஸ்லீம் மக்களுக்கு எதிரான பழங்குடி மக்கள் எடுக்கும் இந்த உறுதிமொழி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், “சட்டத்தால் தடைசெய்யப்பட்ட இந்தியாவின் 17-வது பிரிவின்கீழ் இந்த சம்பவம் தீண்டாமைக்கு சமம் என்பதை நாம் அனைவரும் கவனிக்க வேண்டும் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என ட்வீட் செய்துள்ளார்.
படிக்க :
‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !
ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்
திரைப்படத் தயாரிப்பாளர் ஓனிர், “வெறுக்கத்தக்க மற்றும் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தைத் தூண்டும் பொதுக்கூட்டத்தை நடத்த இவர்களுக்கு எப்படி அனுமதி கிடைத்தது” என்று கேள்வியெழுப்பி ட்வீட் செய்துள்ளார்.
சத்தீஸ்கரின் இந்து மதவெறி அமைப்புகளாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் ஆகியவை இந்து – முஸ்லீம் கலவரங்களை அப்பகுதியில் பல ஆண்டுகளாக திட்டமிட்டு உருவாக்க முயற்சித்து வரும் சூழ்நிலையில், இந்த உள்ளூர் மோதலை மிகப்பெரும் மதக் கலவரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த முஸ்லீம் வெறுப்பு உறுதிமொழி என்பது தெளிவாக தெரிகிறது.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் ஆகிய மதவெறி பிரச்சாரங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மட்டுமே இதுபோன்ற முஸ்லீம் வெறுப்பு, மதவெறி பிரச்சாரங்களில் இருந்தும், காவி குண்டர்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் கலவரங்களில் இருந்தும் பழங்குடி மக்கள் மீள்வதற்கு ஒரே தீர்வு.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க