மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள மன்வார் தாலுக்காவில் ‘சௌர்ய யாத்திரை’யின் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் இந்துத்துவ குண்டர்கள் நுழைய முயன்றபோது இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.
இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் புகார் அளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் முஸ்லீம்களை மட்டுமே போலீசு கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேருக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு முஸ்லீம் நபரின் வீட்டை, கட்டிட அனுமதி இல்லாததைக் காரணம் காட்டி இடித்து தள்ளியுள்ளது போலீசு.
கடந்த டிசம்பர் 23,2021 அன்று இந்துத்துவா குண்டர்கள் ‘சௌர்ய யாத்ரா’ (துணிச்சல் பேரணி) நடத்தினார்கள். முஸ்லீம் மக்கள் வாழும் காந்தி நகர் பகுதிக்குள் நுழைய முயற்சித்தனர். அவர்களை போலீசு தடுத்து நிறுத்தியபோது இந்துகளுக்கும் முஸ்லீம்களுக்கு இடையே வன்முறை நடப்பதுபோல் வதந்திகள் பரவியது.
படிக்க :
♦ அடுத்த ஜிகாத் : முசுலீம் தெரு வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் || அலிசன் ஜாஃப்ரி
♦ தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !
அதனைத் தொடர்ந்து காந்தி நகர் பகுதியில் இந்துத்துவ குண்டர்கள் பேரணி சென்ற சில நிமிடங்களுக்குப் பிறகு அந்நகரின் சிந்தனா சாலை மற்றும் நாலா பிரங்கன் ஆகிய இடங்களில் இந்துத்துவ குண்டர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் துவங்கியது.
இதேபோன்ற மோதல் சம்பவம், ஏற்கெனவே 2016-ம் ஆண்டும் இந்த பகுதியில் நடந்துள்ளது. ஜனவரி 12, 2016 அன்று மனவார் நகரில் விஸ்வ இந்து பரிஷத்தின் ‘சௌர்ய யாத்திரை’யின்போது வகுப்புவாத வன்முறை வெடித்தது. நிலைமையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு போட்டது. அப்போது முஸ்லீம் சிறுபான்மை சமூகத்தினருக்கு சொந்தமான பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட கடைகள் விஎச்பி குண்டர்களால் எரிக்கப்பட்டன.
தற்போது, டிசம்பர் 23 அன்று நடைபெற்ற காந்திநகர் வன்முறையில், “பேரணியில் செல்லும்போது இந்துத்துவ குண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட உட்கட்சி சண்டை மற்றும் பேரணிக்கு செல்ல சொன்ன வழியை திசைத்திரும்பும் இந்துத்துவ குண்டர்களை போலீசு தடுத்து நிறுத்தியதால் வன்முறை என்ற வதந்தி பரவியது போன்றவை இருத்தரப்பினரிடையே வன்முறையும் குழப்பமும் உருவாக காரணங்களாக அமைந்தன. சிந்தனா சாலை மற்றும் நாலா பிரங்கள் ஆகிய இடங்களில் கல் வீச்சு சம்பவம் பதிவாகியுள்ளது” என்று தார் போலீசு கண்காணிப்பாளர் ஆதித்ய பிரதாப் சிங் கூறினார்.
பஜ்ரங்தள் உறுப்பினர் பங்கஜ் குஷ்வஹா (36) என்பவரின் புகாரின் பேரில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 1984 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 30 பேர் மற்றும் பெயரிடப்பட்டத 22 பேர் மீது தார் போலீசு மூன்று எஃப.ஐ.ஆர்களைப் பதிவு செய்துள்ளது. வழக்கு பதிவுசெய்யப்பட்டதில் அதிகமானவர்கள் முஸ்லீம் மக்கள்.
3 अभियुक्त जो ड्राईवर है और खलील खत्री के 3 मंजिला इमारत में किराए से रहते थे को घटना के कुछ घंटों बाद गिरफ्तार किया।
एक दिन बाद खत्री को मकान का नोटिस मिला, खत्री और उसके बेटे खालिद को पुलिस शाम में उठा ले गई और अगले दिन उनका 45 लाख का माकन तोड़ दिया। खालिद पुलिस कस्टडी में है। pic.twitter.com/o3RiPLiAcU
— काश/if Kakvi (@KashifKakvi) December 25, 2021